திங்கள், அக்டோபர் 05, 2009

உன்னை நினைத்து..!




நான்  உறங்காத  இரவுகள்
உன்னை  நினைத்தே  விடிகின்றன 
இரவு  உறங்கிக்கொண்டு   இருக்க
நான்  மட்டும்  ஏனோ  விழித்துக்கொண்டு
இருக்கிறேன் உன்னை  நினைத்து..!


உன்  தலை  முடி    இல்லாத  சாப்பாடில் 
பசி   ஆறுவதில்லை   நான் ..!


நீ  மாட்டி   விடாத   ஏன்   சட்டை   பட்டன்கள்
மாட்ட   முடிவதில்லை   என்னால்..!
 
நீ  என் அருகில்  இருந்து
தூக்கத்தை  கெடுத்தாய் அன்று
என்னை  விட்டு   தொலைவில்  பொய்
தூக்கத்தை  கெடுக்கிறாய்  இன்று..!

நீ  கலையில்  சொன்ன  சுப்ரபாதத்தில் 
நிறைந்து  இருந்தது
அந்த  நாளின்  சந்தோசம்..!

இறைவனிடமும்  கோபம்  எனக்கு
நீ   வாழும்  இதயத்தை
நீ  தொட  முடியாத  இடத்தில
வைத்தானே  என்று..!

மாலையில்  நீ  தந்த  காபியில்
கலந்திருந்தது  பாலும்  சக்கரையும்  அல்ல
பாலும்  நமது  காதலும் அதனால்  தான்
அதற்கு  சுவை  அதிகம்..!

உன்  முந்தானையில்  தலை
துவட்டுவர்த்தற்காக என்  தலை முடிகள்
எல்லாம்  ஏங்கி  கிடக்கின்றன..!

என்  தோட்டத்து மல்லிகை
பூவும்  வாடிபோகின்றன  உன்
தலையில்  மலராத  ஏக்கத்தில்..! 

ஒவ்வொரு  ஆண்டும்   பிறந்த  நாள்
அன்று  நீ  தரும்  அன்பு  முத்ததிற்காக  
ஒவ்வொருநாளும்  பிறக்க
கூடாத  என்றே  தோன்றிற்று ...!

தென்றல்  காற்றும்  என்னை  சுடுகிறது..!

நீ  இல்ல  இடத்தை  தலையணை
பிடிக்க  நினைக்கிறது..!


உன்னோடன்  வாழ்ந்த   வாழ்வை  விட
உன் நினைவில்   வாழும்  இந்த  வாழ்கை  தான்
சுகனும்  சோகமும்  நிறைந்தது..!


நீ  இல்லாத  இரவுகளே  என்னை
கொன்று  விட்டன  அன்பே
நீ  இல்லாத  இந்த  உலகம்  சுமப்பது
என்னமோ  என்   உயிர்   உள்ள  பினதைதான்..!

செவ்வாய், செப்டம்பர் 29, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!















உலகில் பிறந்த எந்த மலரும்
உதிர்ந்தால் மலர்வதில்லை
தாயின் கருவறையில் இருந்து
உதிர்ந்த மலோரோன்று
மீண்டும் மலர்ந்த தினம் இன்று..!

இன்று மட்டும் நிலா
விடுப்பு எடுத்திருக்கும்
தன்னை விட அழகான
நிலா பூமியில் பிறந்ததால்..! 


பூத்துக்குலுங்கும் ரோஜாக்களும்
வெட்கி தலை குனியும் ஒரு நொடி  
உன்னை கண்டால்
இந்த பூ நம்மை விட
அழகாய் சிரிக்கிறதே  என்று..!

தோல்விகள் உன் வழியில்
குறுக்கிட்டால்
தோல்விகளுக்கு தோல்வி கொடு
தன்னம்பிக்கையுடன்..!

ரோஜா நிலா வானம்
புன்னகை தேவதை எல்லாம்
என் கவிதையை நிரப்ப
சந்தோசத்தை இறைவன்
உன் வாழ்வில் நிரப்பட்டும்..!

வியாழன், செப்டம்பர் 24, 2009

நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!


நீ வந்த இந்த நொடி
நான் என்னை உணர்ந்தேன்
நீ பார்த்த அந்த நொடி
நான் மிண்டும் ஒருமுறை பிறந்தேன்
நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் சிதறிப்போகிறேன்
நீ தந்த கண்ணீர்
நான் நம் காதலை உணர்தேன்
நீ தந்த முதல் முத்தம்
நான் நீ நாம் ஆனோம்
நீ தந்த நம் குழந்தை
நம் காதல் பரிசு
நம் விரும்பாத நமது
மரணமும் சொல்லும் நமது காதலை
காலங்கள் தாண்டி வாழும் காவியமாய்
எங்கும் நிறைந்தவன் கடவுள்
என்னுள் நிறைந்தவள் நீ என்று..!

கண்ட நாள் முதல்..!


குழந்தையின் மனதையும்
புரிந்த நீ ..,
என் மனம் மட்டும் ஏன்
புரிய மறுக்கிறாய்
என் மனம் என்னிடம் இல்லை
உன்னை கண்ட நாள் முதல்..!

சனி, செப்டம்பர் 05, 2009

தோழி..!


அன்பே கடவுள்
என்னிடம் அன்பு மட்டும் செய்யும் நீ
என்ன கடவுளா இல்லை
கடவுள் தந்த வரமா..?

என் கோபங்களை எல்லாம் வாங்கிகொண்டு
புன்னகையை மட்டும் தருகிறாய்
ஒரு குலந்தையின் கோபத்தை
தாங்கிக்கொல்லும் தாய் பொல..!

கீழே விழுந்த போதெல்லாம்
நான் சிரித்து கொண்டுதான் எழுந்தேன்
நீ மட்டும் ஏனோ கண்ணீருடன்
கோவில் செல்கிறாய்..!

உன்னுடன் சண்டை போடும் போதெல்லாம்
நான் செய்த தவறுக்கு மன்னிப்பு
கேட்பாய் என்னிடமே குழந்தை போல
ஒரு நாளாவது திட்ட மாடாயா..!

ஒவ்வொரு முறையும்
நீ என்னிடம் தோற்று என்னை
வெற்றி பெற வைக்கிறாய்
நீ எப்போதும் தோற்பதில்லை
என்னை வென்று கொண்டே இருக்கிறாய்..!

மேகமாய் உன் சோகம்
மலையாய் உன் கண்ணீர்
சூரியனாய் வருவேன்
உன் கண்ணீர் துடைக்க..!

மேகம் களைந்து போகும்
மலை நின்று போகும்
சூரியன் நிலைத்து நிற்கும்
பூமிக்கு ஒளி தந்து கொண்டே
உன்னிடமிருந்து மூவாயிரம்
மைல்கள் தாண்டி பக்கத்தில்..!

காற்றாக உன் நினைவை சுவாசிக்கவில்லை என்றபோதும்
நீராக உன் நினைவையே அருந்துகிறேன்
நீரின்றி அமையது உலகு
நீ இன்றி நானும் இல்லை..!

உனக்காக கொடுக்க ஒன்றுமில்லை
என்னிடம் என் உயிரை தவிர
கேட்டுவிடாதே தரமாட்டேன்
நான் இல்லை என்றால் நீயும் இல்லை..!

(இந்த கவிதை என் அன்பு தோழிக்கு)

( புன்னகை - பூக்களுடன் விளையாடி , குழந்தைக்கு முத்தமிட்டு, கடல்கள் தாண்டி , சிகரங்கள் ஏறி , தேசம் தாண்டி பரவட்டும்..! உங்கள் புன்னகையோடு)





ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2009

உன் விழி தரும் வலி..!

உன் பார்வையை அம்பாகி என் இதயம் துளைக்கிறது
வலி தாங்க முடியாமல் தவிக்கிறேன் நான்
உன் சிரிப்பே அலையாகி அடித்துச்செல்கிறது என்னை
கரை சேரமுடியாமல் தத்தளிக்கிறேன் நான்
உன் மௌனமே தீயாகி சுட்டெரிக்கிறது என்னை
வெப்பம் தாங்கமுடியாமல் எரிந்து கொண்டிருக்கிறேன் நான்
நீ என்னை கொல்ல‌வில்லை என்ற போதும்
உன்னால் செத்துக்கொண்டுதன் இருக்கிறேன் நான்..!

புதன், ஆகஸ்ட் 26, 2009

பட்டுபுடவைக்கே பெருமை உன்னால்..!

என்றும் சுடிதாரில் பார்த்த உன்னை
முதல் முறையாக பட்டுபுடவையில்
பார்த்தவுடன் தான் தெரிந்து கொண்டேன்
ஏன் நெசவுத்தொழிலாளர்கள் தங்கள்
போராட்டத்தை திரும்ப பெற்றார்கள் என்று..!

வீதி உலா...!

சின்ன மீன்களை விட்டு விட்டு
பெரிய மீனுக்காய் காத்திருக்கும் கொக்கை போல
நானும் தினம் காத்திருக்கிறேன்
நீ நடந்து வரும் வீதியில்..!

மே மாதம்..!

உன்னை காணாததால்
என் கல்லூரி மரங்களும்
தன் இலையை உதிர்த்து
தற்கொலை செய்கிறதே
மே மாதத்தில்...!

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009

காதல்....!

கத்தியின்றி ரத்தமின்றி
கண்களால் செய்யப்படும்
இதயமாற்று அறுவை சிகிச்சை..!







எங்கே தொலைந்தேன்...?

என்னை நானே தேடுகிறேன்
எங்கே தொலைந்தேன் என்று
நான் தொலைந்தது உன்னுள்
என்பதை மறந்து...!

அன்புள்ள துபாய் கணவனுக்கு...!

அன்பே நீ அங்கு
சூரியனாய் சுடர்கிறாய்
உன் பிரிவு தானடா என்னை
வெயிலாய் சுடுகிறது...!

என்னவளே......!

இமைகள் எனும் கேமரவால் படம்பிடித்து
கண்கள் எனும் காந்தத்தால் என்னை கவர்ந்திழுத்து
அன்பு எனும் படை வீரர்கள் கொண்டு என்னை சிறை பிடித்து
இதயம் எனும் இருட்டறையில் அடைத்தவளே....!