செவ்வாய், செப்டம்பர் 29, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!















உலகில் பிறந்த எந்த மலரும்
உதிர்ந்தால் மலர்வதில்லை
தாயின் கருவறையில் இருந்து
உதிர்ந்த மலோரோன்று
மீண்டும் மலர்ந்த தினம் இன்று..!

இன்று மட்டும் நிலா
விடுப்பு எடுத்திருக்கும்
தன்னை விட அழகான
நிலா பூமியில் பிறந்ததால்..! 


பூத்துக்குலுங்கும் ரோஜாக்களும்
வெட்கி தலை குனியும் ஒரு நொடி  
உன்னை கண்டால்
இந்த பூ நம்மை விட
அழகாய் சிரிக்கிறதே  என்று..!

தோல்விகள் உன் வழியில்
குறுக்கிட்டால்
தோல்விகளுக்கு தோல்வி கொடு
தன்னம்பிக்கையுடன்..!

ரோஜா நிலா வானம்
புன்னகை தேவதை எல்லாம்
என் கவிதையை நிரப்ப
சந்தோசத்தை இறைவன்
உன் வாழ்வில் நிரப்பட்டும்..!

வியாழன், செப்டம்பர் 24, 2009

நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!


நீ வந்த இந்த நொடி
நான் என்னை உணர்ந்தேன்
நீ பார்த்த அந்த நொடி
நான் மிண்டும் ஒருமுறை பிறந்தேன்
நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் சிதறிப்போகிறேன்
நீ தந்த கண்ணீர்
நான் நம் காதலை உணர்தேன்
நீ தந்த முதல் முத்தம்
நான் நீ நாம் ஆனோம்
நீ தந்த நம் குழந்தை
நம் காதல் பரிசு
நம் விரும்பாத நமது
மரணமும் சொல்லும் நமது காதலை
காலங்கள் தாண்டி வாழும் காவியமாய்
எங்கும் நிறைந்தவன் கடவுள்
என்னுள் நிறைந்தவள் நீ என்று..!

கண்ட நாள் முதல்..!


குழந்தையின் மனதையும்
புரிந்த நீ ..,
என் மனம் மட்டும் ஏன்
புரிய மறுக்கிறாய்
என் மனம் என்னிடம் இல்லை
உன்னை கண்ட நாள் முதல்..!

சனி, செப்டம்பர் 05, 2009

தோழி..!


அன்பே கடவுள்
என்னிடம் அன்பு மட்டும் செய்யும் நீ
என்ன கடவுளா இல்லை
கடவுள் தந்த வரமா..?

என் கோபங்களை எல்லாம் வாங்கிகொண்டு
புன்னகையை மட்டும் தருகிறாய்
ஒரு குலந்தையின் கோபத்தை
தாங்கிக்கொல்லும் தாய் பொல..!

கீழே விழுந்த போதெல்லாம்
நான் சிரித்து கொண்டுதான் எழுந்தேன்
நீ மட்டும் ஏனோ கண்ணீருடன்
கோவில் செல்கிறாய்..!

உன்னுடன் சண்டை போடும் போதெல்லாம்
நான் செய்த தவறுக்கு மன்னிப்பு
கேட்பாய் என்னிடமே குழந்தை போல
ஒரு நாளாவது திட்ட மாடாயா..!

ஒவ்வொரு முறையும்
நீ என்னிடம் தோற்று என்னை
வெற்றி பெற வைக்கிறாய்
நீ எப்போதும் தோற்பதில்லை
என்னை வென்று கொண்டே இருக்கிறாய்..!

மேகமாய் உன் சோகம்
மலையாய் உன் கண்ணீர்
சூரியனாய் வருவேன்
உன் கண்ணீர் துடைக்க..!

மேகம் களைந்து போகும்
மலை நின்று போகும்
சூரியன் நிலைத்து நிற்கும்
பூமிக்கு ஒளி தந்து கொண்டே
உன்னிடமிருந்து மூவாயிரம்
மைல்கள் தாண்டி பக்கத்தில்..!

காற்றாக உன் நினைவை சுவாசிக்கவில்லை என்றபோதும்
நீராக உன் நினைவையே அருந்துகிறேன்
நீரின்றி அமையது உலகு
நீ இன்றி நானும் இல்லை..!

உனக்காக கொடுக்க ஒன்றுமில்லை
என்னிடம் என் உயிரை தவிர
கேட்டுவிடாதே தரமாட்டேன்
நான் இல்லை என்றால் நீயும் இல்லை..!

(இந்த கவிதை என் அன்பு தோழிக்கு)

( புன்னகை - பூக்களுடன் விளையாடி , குழந்தைக்கு முத்தமிட்டு, கடல்கள் தாண்டி , சிகரங்கள் ஏறி , தேசம் தாண்டி பரவட்டும்..! உங்கள் புன்னகையோடு)