சனி, அக்டோபர் 29, 2011

அன்பே . . .

ம்
திருமணதன்று
கைது செய்தேன்
உன்னை அன்பே
ஆனால்
நானல்லவோ 
உன்னிடம் கைதி
ஆகிப்போனேன்...


த்தனை
கொடி ஆண்கள்
இந்த உலகில்
சிலர் அழகு ,
சிலர் அறிவு
நீ அழகில்லை
நீ அறிவில்லை
அழகாய் இருக்கிறாய்
அறிவாய் இருக்கிறாய்
எனக்கு மட்டும் ....


காலையில்
சுட்டெரித்து
மாலையில் மயக்கும்
சூரியன் போல
நீயும் காலையில்
என்னை படுத்தி
மாலையில்
அணைக்கிறாய் ....




காலையில்
உன் மேல்
கோபம் என்றபோதும்
மாலையில் அது
மறைகிறதே
தாமரை இலை நீர் போல
இதற்கு பெயர்தான் காதலா
என் காதலா .....

நீயே
என் துக்கமும்
சந்தோசமும்
ஆகிப்போனாய்
உன் கை
பிடித்தது முதல் . . .



நீ
வரும் வரை
காத்திருந்து
கண்கள் பூத்து
போகின்றன
ஏன்  இந்த மலரை
வாட வைக்கிறாய் .....


ன்னை
உனக்கு
பிடித்து இருக்கிறதா
என்று நான் கேட்டபோது
நீ தந்த மௌனம்
என்னை கொன்றது ...

ன்
கண்கள்
நீரால் கரைந்த பொது
நீ தந்த முதல் முத்தம்
என்னை வென்றது .....



னதில்
உன்னையும்
வயிற்றில் உன்
குழந்தையையும்
சுமக்கின்றேன் காதலனே
வலிக்கவில்லை 
ஏனென்றால்
நீதானே
எப்போதும் என்னை
சுமக்கின்றாய் . . .



னக்கு
என்ன வேண்டும்
கேள் என்னிடம்
என் உயிரை தவிர
உனக்கு முன்னால்
சாகமாட்டேன்
நீ போன பிறகு
வாழவும் மாட்டேன் ....

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

காதல் கவிதைகள் ...!


 
கீற்று
கொட்டகை
பாவாடை தாவணி
அவள் எழுந்து சென்ற பின்
அவள் இருந்த இடத்தில்
சென்று அமர்ந்து கொண்டேன்
முதன் முதலாய் எனது
காதல் சொல்லப்பட்டது ....







 அவளை
காண்பதற்காகவே
முதல் வரிசையில்
போய்  நின்று
கொள்கிறேன்
ஒன்றும் தெரியாதவன்
போல அவள்
என்னை பார்கையில் . . .




 




புதிதாய்
வாங்கிய பேனா
என் கையப்பத்தை
மறந்து எழுதின
உந்தன் பெயரை ...







 



நான்
படித்த
கவிதைகளில்
மிகவும்
அழகானது
அவளின்
பெயர்தான்  ...






 



நானும்
ஒரு அன்றாடம் காச்சி
ஆகிப்போனேன்
உன்னை பார்க்காத
நாட்களில்
எனது கண்கள்
பசியருவதில்லை ....










வனோ
ஒருவனின்
கை பற்றி சென்றவளை
நினைக்கவும் முடியாமல்
மறக்கவும் முடியாமல்
தவிப்பதில் இருந்தே
உணர்கிறேன் ,
எனது காதலை...








து
இன்னும் நீளாதா
என்று நான்
ஏங்கி தவித்த பொது
முடிந்தது உந்தன்
முதல் முத்தம் . . .










யார்
சொன்னது சேலையை
பெண்கள் மட்டும்
அணிகிறார்கள் என்று
நானும் அணிகிறேன்
சேலையை
இரவில்
உன்னுடன் சேர்த்து ....