ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

பப்பு கிளம்பிடான்யா..!


(ஒரு ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு இதை  நினைத்து  பார்த்து கொள்ளுங்கள் )  
இடம் : துபாய் , மணி :  5 :50 மாலை
(அப்படியே நம்ம கேமராவை அவுட் போகஸ் ல துபாய் யை வனத்தில் இருந்து காமிக்க   மெதுவா ஆரம்பிச்சு , அப்படியே வேகாத கூட்டி ஒரு ஜன்னல் வலிய போய்கிட்டு இருக்கு கேமரா, ஒரு இடத்தில் அது நிற்கிறது )

  அந்த ஒரு அரை முற்றிலும் குளிருட்ட பட்ட அரை அது ,  நெட்வொர்கிங் மிசின்கள், சர்வர், நெட்வொர்கிங்வாயர்கள் என் ஒரே ஹை டெக் நிறைந்து வழிகிறது , இருண்ட அரை அதில் மிசின் களில் இருந்து வந்த , சிறு சிறு ஒளியை தவிர வேறு எதுவும் இல்லை , அந்த மிசின் களுக்கு மத்தியில் ஒருவன் உட்கார்ந்து கொண்டே தூங்கி வலிந்து கொண்டு இருந்தான், இதுல குறட்டை சத்தம் வேறு , குர்ர்ர் குர்ர்ர் (குறட்டை விடுராராம்மாம்)    இவன்தான் நமது பப்பு ...  
(இதை எல்லாம் ஒரு சங்கர் படம் ரேஞ்சுக்கு நினைத்துகொள்ளுங்கள் பக்கியளா)

திடிரென ஒலிக்க ஆரம்பித்த தொலைபேசி , ஒற்றை கண்களை மட்டும் விழித்தான் பப்பு ( ஒரு நிமிடம் போருக்க முடியுமா நம்ம ஹீரோ என்திரிசுட்டறு ஒரு ஒபெனிங் சாங் போடுகிறேன் , இவன்  பேரை  சொன்னதும் பெருமை  சொன்னதும்
கடலும்  கடலும்  கை  தட்டும் ;! இவன்  உலகம்  தாண்டிய உயரம்  கொண்டதில் நிலவு  நிலவு  தலை  முட்டும் !, கவிஞர் திரு . வைரமுத்துவின் வரியை ஆட்டைய போட்டதுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் )  தொலை பேசியை எடுத்து பேச ஆரம்பித்தான் பப்பு , எதிர் முனையில் அவனது மேலாளர் பப்பு , வேகமாக எனது அறைக்கு வா , மேலாளர் அழைத்து விட்டார் , பாய்ந்து சென்றான் அப்படி நினைத்தால் அது உங்கள் தப்பு ,

அடி அசைந்து கொட்டாவி விட்டு கொண்டே , மாலை வணக்கம் தலை , பப்பு மேலாளருக்கு இல்லை , மேலாளர் பப்புவிற்கு போட்டார் , நீ கண்டிப்பா போய்தான் ஆகணுமா பப்பு , மேலே பார்க்க ஆரம்பித்தான் பப்பு , பெருத்த முச்சு விட்டு கொண்டு , நான் கண்டிப்பா போய்தான் அகனும் , ( டேய் இது உனக்கே ஓவரா இல்ல , நீ எங்க போய் எந்த வெட்டி முறிக்க போற ) , உன்னை விடுவதற்கு எங்களுக்கு மனமே இல்லை பப்பு , உன்னை போல ஒருவன் எங்களுக்கு இனிமேல் கிடைக்க மாட்டன் பப்பு ( அப்பு நான் இது வரைக்கும் வேலையே பார்த்தது கிடையாது ,நீ என் இவ்வளவு பீலிங்க்ஸ் விடுற திரும்பி கொட்டாவி விட்டு கொண்டான் பப்பு),

இதில் ஒரு கையழுத்து போட்டு விட்டு போ பப்பு , இந்த கம்பெனி கான்ட்ராக்ட் முடிந்ததால் பப்பு இந்த கம்பெனி விட்டு வெளியே போகிறான் , இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு , பப்பு கிளம்பினான் நல்லபடியா போய் விட்டு வா பப்பு , ( இந்த இடத்துல உங்க காதுக்குள்ள லாலா லாலா லாலா அப்புடி ஒரு மியூசிக் வந்து கிட்டு இருக்கணும் ) மேலாளர் மற்றும் பப்புவின் கண்களில் கண்ணீர் , ( இங்கே விக்ரமன் படம் ரேஞ்சுக்கு நினைத்து கொள்ளுங்கள் அந்த லாலா லாலா மியூசிக் கூடவே ,  அட பாசகார பய பக்கியா , இம்ம்புட்டு பாசமாவாடா இருப்பிய ) ,

 இப்படி ஒரு அடிமையை விட்டு விட்டோமே என்று மேலாளருக்கு வருத்தம் , நம்மகிட்ட இருந்த ஒரே ஒரு அடிமை கம்பனியை விட்டுடமேனு பப்புவிற்கு வருத்தம் ....
தனது ஒப்பந்தத்தை தொடராமல் , வேலையை விட்டு விட்டு செல்ல ஆரம்பித்தான் பப்பு ...
 தென்பாண்டி   சீமையிலே .... தேரோடும் வீதியிலே ... மான் போல வந்தவனே... யார் அடிச்சாரோ ....

பப்புவின் பயணம் தொடரும் ....
The End .....
     

-
நமது வாழ்கையில் நிறைய பேர் வந்து செல்கின்றனர் , சிலரை பிடிக்கிறது , மிகவும் பிடிக்கிறது , ஒரு சிலரை உயிருக்கு உயிராக நேசிக்கவும் செய்கிறோம் , வாழ்கை செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்து கொண்டே இருந்த பொது அவர்களின் முக்கியத்துவமோ மதிப்போ நமக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம் அனால் பிரிவு என்ற ஒன்று வரும் பொது மட்டுமே அவர்களின் உண்மையனா மதிப்பு நமக்கு தெரிய வரும் , இருந்த போதும் தனிப்பட்ட ஒரு ஆத்மாவின்  பயணம் தனிமையானதே யாரையும் சார்ந்து அது செல்வது இல்லை , இண்டர்நெட்டும் ஜி டால்க் இருக்கும் வரை நம்மள யாராலும் பிரிக்க முடியாது ,   இதுவரை இந்த தேசத்தில் ( அமீரகம் ) எனக்கு அன்பும் , பாசமும் தந்த எனது நண்பர்கள்  அனைவருக்கு நன்றி , இனி நமது அடுத்த பதிவு எனது தாயத்தில் இருந்து வெளிவரும், அனைவருக்கும் , அனைத்திற்கும் நன்றி ....