செவ்வாய், மே 25, 2010

நண்பன்..!

என்று பார்த்திருப்பேன்
உன்னை ...,
அழிந்து போன
என் வாழ்கை புத்தகத்தின்
கல்லூரி பாடத்தில் 
அழியாத உனது பக்கம்
மட்டும் இன்னும் அழகாய்..,

எதெற்கெல்லாம் கோபப்படுவாய்
என்னிடம்...,
என் தட்டில் நான் மட்டும்
சாப்பிட்ட பொழுது ,
நம் அன்னையை
உன் அம்மா என்று
சொன்ன பொது ,
நேர்முக தேர்வில் ஒரு முறை
நான் தோற்று நொந்த பொது ,

நான் என் மேல் வைக்கத
நம்பிக்கை நீ வைத்தாய்
சிறு பூச்சி கண்டு நடுங்கிய
வீரன் என்னை
வால் ஏந்தி போர் தொடுக்கும்
துணிச்சல் தந்தாய்..,

உன்னிடம் கேட்க நினைத்த
கேள்விகள் ஆயிரம்
இதற்கு மட்டும் பத்தி சொல்
போதும் 
பணம் பதவி பெண் பித்து பிடித்து
அலையும் உலகில்
நீ மட்டும்
எங்கிருந்து வந்தாயட
எதையும் என்னிடம்
எதிர் பார்க்காத
இறைவன் போல ...,

உன் வீட்டு திண்ணை
கல்லூரி மரங்கள்
விளையாட்டு மைதானம்
வெள்ளி கிழமை
பிள்ளையார் கோவில்
அனைத்தும் காத்து கிடக்கின்றன
நமது வருகைக்காய்..,

என் மேல் எனக்கே இல்லாத
அக்கறை உனக்கு
நீ மட்டும் என்னுடன் இறு
அலை அடித்த போதும்
கரை சேர்வேன் வாழ்வில் ..,

நீ என் மேல் கொண்ட
கோபத்திற்கு தமிழில்
வேறு அர்த்தம் தேடினேன்
அக்கறை என்று பதில் கிடைத்தது ...,

 உன் முகம் பார்க்காத
நாட்களிலும் சூரியன்
கலையில் வந்து
காட்டுகிறது
உன் முகத்தை ..,

நீ என் ஆட்டோகிராப் நோட்டில்
எழுதிய ஒற்றை வரியை
மீண்டும் மீண்டும்
படிக்கிறேன்
அது
" ஈருடல் ஒருயிராய் இறைவன்
செய்த தவற்றின் விளைவுதான்
நாம் நண்பா...,"

-
சிவராஜன் ராஜகோபால்

திங்கள், மே 10, 2010

எல்லாரும் என்னை மன்னிச்சுருங்க..!


சில சமயங்களில் நாம வாழ்க்கைல பெரிய முட்டஅள் தனமான முடிவுகளை எடுப்போம் , நம்ம நண்பர்கள் சொல்லியும் , பெரியவங்க சொல்லியும் அதை எல்லாம் கேக்காம இந்த மாதிரி முடிவுகளை நாம எடுக்குறோம் , அப்படி நான் சமமீபத்தில் எடுத்த ஒரு முடிவு , எனக்கு பெரிய தலை வலியை கொடுத்தது , எப்பவும் எந்த தவறும் வாழ்கையில் செய்யவே கூடாதுன்னு இருக்குற எனக்கு இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்தது , தெரிந்தே தவறு செய்தது மாதரி ஆகிரடுச்சு ,
எந்த முடிவும் எடுக்கிற முன்னாள் என் நண்பர்களிடம் , என் குடும்பத்தாரிடம் அவர்களின் கருத்தை கேட்ட பிறகே , தீவிரமாக சிந்தித்து முடிவு எடுப்பேன் , என் நண்பர்களிடம் அதை பத்தி கேட்ட பொது ஐயோ நண்பா அதை மட்டும் செய்யதே நமக்கு எதுக்குடா அது எல்லாம் வாழ்க்கைல ரொம்ப ரிஸ்க் எடுக்காதே என்றார்கள் ,
எனக்கு மட்டும் இது பெரிய தவறவே தோணல , என் அலுவலகத்தில் உள்ள மேலாளரிடம் இதை பத்தி சொன்ன பொது , அவர் சொல்லிய பதில் இது , நீ நல்ல இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் தம்பி , அதனால சொல்கிறேன் ,  அத மட்டும் செய்யவே செய்யத , ரொம்ப வருத்த படுவே என்று ,
அட என்னடா எல்லாரும் இப்படி பயபடுறாங்க , நம்ம அண்ணா ஒருத்தர் இங்கே இருக்காரே அவரிடம் கேக்கலாம்னு அவருக்கு முதல் முறை அழைத்தேன் , அது பற்றி அவரிடம் கேட்ட பொது , அவரோ பண்ண கூடாது அன்று உத்தரவே போட்டு விட்டார் , நான் முடிந்த வரை அவரிடம் எடுத்து கூறியும் எந்த பயனும் இல்லை , இதை பத்தி பேசுவதாக இருந்தால் இனிமேல் என்னக்கு கால் பண்ணாதே என்று இணைப்பை துண்டித்து விட்டார் ,
அப்படி என்ன நாம கொலையா செய்ய போறோம் எல்லாரும் இவ்வளவு பயபடுராங்கலேன்னு , பண்ணிதான் பாத்துருவோம் அப்புடின்கிற முடிவுக்கு வந்தேன் , துணிச்சலோட , எதுக்காகவும் நாம பய பட வேண்டாம்னு முடிவு பண்ணிடு , அதுவும் போன சனிக்கிழமை தான் ,
எல்லாரும் பயந்த அந்த ஒரு செயலை துணிந்து செஞ்சேன் , செஞ்சு முடிச்ச பிறகுதான் தெரிஞ்சது , அவங்க சொன்னது எல்லாம் உண்மை தான் நான் தான் அவசரபட்டு இந்த மாதிரி பண்ணிடேன் , நான் இப்படி பண்ணினதா என் நண்பர்களிடம் சொன்னால் என்னை பார்த்து ஏளனமாய் சிரிப்பார்கள் ,  பெரிய தப்பு பண்ணிடமேன்னு ரொம்ப வருத்த பட்டேன் , நீங்க இந்த மாதிரி தப்பு பண்ணிராதிங்க தயவு செஞ்சு , என்ன பண்ணினேன்னு உங்களுக்கு சொல்லவே இல்லையே சுறா படத்துக்கு தெரியாம போய் தியேட்டர்ல பஅத்துட்டேங்க ...
 
குறிப்பு :
இத படிச்சுட்டு நீங்க டென்ஷன் ஆனா அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது...

புதன், மே 05, 2010

காதல் கவிதை...!


கைகுட்டையில் அவள் முகம் பதித்து
சிரித்த பொது சிந்திய முத்துக்களை
அல்லியவது பிழைத்து கொள்ளலாம்
என்று , கோடி கேட்டாலும் கொட்டி
கொடுக்கும் வள்ளல் அவள் ...
சிரிப்பில்  மட்டும் ஏனோ
 கஞ்சத்தனம் காட்டுகிறாள்

ஒரு மழைகாலத்தில் அவள்
வானம் பார்த்து புன்னகைத்த
மேகமாக பிறந்திருக்க கூடாத
ஒரு நொடியே வாழும்
மலை துளியாக அவள் மேல்
விழுந்திருக்க கூடாத
அவளை தொட்ட புண்ணியத்தில்
கங்கையில் சேர்ந்திருப்பேன்

ஒரு மலை வேளையில்
தயங்கி தயங்கி வந்து
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
என்றபோது உன் காதலை மறைத்து
நீ காடிய பொய் கோபத்தில்
நிறைத்திருந்தது நமது காதல்...!

மார்கழி மாத குளிரில்
அதிகாலை சுப்பிரபாதம்
பாடியே அவள் வரும் வழியில்
பூத்திருக்கும் மலர்களை விட
மலர் அணிதுவந்த
எம்மலர் அழகானது...!


அவள் பிரிவில்  வாழும்
ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்
 நீரின்றி வாடும் புல்லுக்கும் செடியுக்கும்
உயிர் அளிக்கும் மலையாக மட்டும் அல்ல
சுட்டு எரிக்கும்  வெயிலாகவும்
என்னை வாட்டி எடுக்கிறாள்...

நானே பார்த்து எழுதி படித்து
ரசித்த அவள் எவ்வளவு அழகு
 என் கவிதைக்கு மட்டும் அல்ல
எனக்கே அவள் சொந்தக்காரி ஆனா பொது 

-
சிவராஜன்