வியாழன், ஜூன் 10, 2010

காலை தென்றல்..!


சோம்பல் முறித்து எழுந்தேன்
மணி 6 , மணக்கண் ஓட்டத்தில்
அம்மா தோழி அப்பா தம்பி தோழன்
யாரும் அருகில் இல்லை

இன்றைய தினத்தை எனக்கு
அருளிய இறைவா நன்றி
தூக்கம் தொலையாமல்
என்னுடன் ஒட்டிக்கொள்ள
நடக்கின்ற கால்கள்
காலைகடன் முடிக்க

முகம் பார்க்க கண்ணாடி
என்னை எனக்கு மட்டும்
அழகாய் காட்டும் அற்புத படைப்பு

நேரமாக நேரமாக
வேகமாக கிளம்ப
தயாராகிறேன் அவளை காண
யார் அவள் ..?

வானோர் வியக்கும்
அழகுக்கும் ,
விண்ணை பிளக்கும்
சிரிப்புக்கும்
சொந்தக்காரி

பூ தலையில் வைத்தல்
வாடிவிடும் என்று
செடியிலேயே வைத்து
அழகு பார்ப்பவள்

எதை சொன்னாலும்
இரண்டு  முறை
சொல்லுவாள்
என்னை முட்டாள்
என்று நினைதலோ

காந்த கதிர்வீச்சை
முதல் முறையாய்
உணர முடிந்தது
அவளது பார்வையில் தான்

எங்கே சென்று இருப்பால்
என் தேவதை ...!


அவள் வேற யாரும் இல்லை
பள்ளி ஊர்திக்காக காத்திருக்கும்
முன்று வயது பெயர் கூட
தெரியாத  அவள் ...!

ஒரு முயல் குட்டிக்கு பாக்
மட்டி விட்டு படிக்க
சொல்லிகிறார்கள்

நீ படித்ததை விட
கற்று கொடுத்தது
அதிகம் ...

தொடரும் பயணம்
அவள் நினைவில்
அவள் சிந்திய புன்னகையுடனே...
-
அவளை பார்த்த சந்தோஷத்தில் , சென்றேன் அலுவலகத்துக்கு , புன்னகையுடன்...

2 கருத்துகள்: