மீண்டும் ஒருமுறை நாம் வானில் ஏறி விண்ணை தொடுவோம் , தோல்விகள் , அவமானம் , பிரிவு... இவை நம்முடனே தொடர்ந்து வந்த போதும் இவற்றில் இருந்து நாம் கற்க வேண்டியது பாடமே தவிர கவலை இல்லை , நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் , நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் ,நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம், அதை அடைவதற்காக நாம் நடத்தும் விட முயற்சியுடனான போராட்டத்தில் இருக்கிறது சுவாரசியமான வாழ்கை, ஏற்று கொள்வோம் எதையும் சந்தோசத்துடனே., தொடரட்டும் சந்தோசம் உங்கள் புன்னகையோடு..!
ஞாயிறு, செப்டம்பர் 26, 2010
பப்பு கிளம்பிடான்யா..!
(ஒரு ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு இதை நினைத்து பார்த்து கொள்ளுங்கள் )
இடம் : துபாய் , மணி : 5 :50 மாலை
(அப்படியே நம்ம கேமராவை அவுட் போகஸ் ல துபாய் யை வனத்தில் இருந்து காமிக்க மெதுவா ஆரம்பிச்சு , அப்படியே வேகாத கூட்டி ஒரு ஜன்னல் வலிய போய்கிட்டு இருக்கு கேமரா, ஒரு இடத்தில் அது நிற்கிறது )
அந்த ஒரு அரை முற்றிலும் குளிருட்ட பட்ட அரை அது , நெட்வொர்கிங் மிசின்கள், சர்வர், நெட்வொர்கிங்வாயர்கள் என் ஒரே ஹை டெக் நிறைந்து வழிகிறது , இருண்ட அரை அதில் மிசின் களில் இருந்து வந்த , சிறு சிறு ஒளியை தவிர வேறு எதுவும் இல்லை , அந்த மிசின் களுக்கு மத்தியில் ஒருவன் உட்கார்ந்து கொண்டே தூங்கி வலிந்து கொண்டு இருந்தான், இதுல குறட்டை சத்தம் வேறு , குர்ர்ர் குர்ர்ர் (குறட்டை விடுராராம்மாம்) இவன்தான் நமது பப்பு ...
(இதை எல்லாம் ஒரு சங்கர் படம் ரேஞ்சுக்கு நினைத்துகொள்ளுங்கள் பக்கியளா)
திடிரென ஒலிக்க ஆரம்பித்த தொலைபேசி , ஒற்றை கண்களை மட்டும் விழித்தான் பப்பு ( ஒரு நிமிடம் போருக்க முடியுமா நம்ம ஹீரோ என்திரிசுட்டறு ஒரு ஒபெனிங் சாங் போடுகிறேன் , இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும் ;! இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலை முட்டும் !, கவிஞர் திரு . வைரமுத்துவின் வரியை ஆட்டைய போட்டதுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் ) தொலை பேசியை எடுத்து பேச ஆரம்பித்தான் பப்பு , எதிர் முனையில் அவனது மேலாளர் பப்பு , வேகமாக எனது அறைக்கு வா , மேலாளர் அழைத்து விட்டார் , பாய்ந்து சென்றான் அப்படி நினைத்தால் அது உங்கள் தப்பு ,
அடி அசைந்து கொட்டாவி விட்டு கொண்டே , மாலை வணக்கம் தலை , பப்பு மேலாளருக்கு இல்லை , மேலாளர் பப்புவிற்கு போட்டார் , நீ கண்டிப்பா போய்தான் ஆகணுமா பப்பு , மேலே பார்க்க ஆரம்பித்தான் பப்பு , பெருத்த முச்சு விட்டு கொண்டு , நான் கண்டிப்பா போய்தான் அகனும் , ( டேய் இது உனக்கே ஓவரா இல்ல , நீ எங்க போய் எந்த வெட்டி முறிக்க போற ) , உன்னை விடுவதற்கு எங்களுக்கு மனமே இல்லை பப்பு , உன்னை போல ஒருவன் எங்களுக்கு இனிமேல் கிடைக்க மாட்டன் பப்பு ( அப்பு நான் இது வரைக்கும் வேலையே பார்த்தது கிடையாது ,நீ என் இவ்வளவு பீலிங்க்ஸ் விடுற திரும்பி கொட்டாவி விட்டு கொண்டான் பப்பு),
இதில் ஒரு கையழுத்து போட்டு விட்டு போ பப்பு , இந்த கம்பெனி கான்ட்ராக்ட் முடிந்ததால் பப்பு இந்த கம்பெனி விட்டு வெளியே போகிறான் , இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு , பப்பு கிளம்பினான் நல்லபடியா போய் விட்டு வா பப்பு , ( இந்த இடத்துல உங்க காதுக்குள்ள லாலா லாலா லாலா அப்புடி ஒரு மியூசிக் வந்து கிட்டு இருக்கணும் ) மேலாளர் மற்றும் பப்புவின் கண்களில் கண்ணீர் , ( இங்கே விக்ரமன் படம் ரேஞ்சுக்கு நினைத்து கொள்ளுங்கள் அந்த லாலா லாலா மியூசிக் கூடவே , அட பாசகார பய பக்கியா , இம்ம்புட்டு பாசமாவாடா இருப்பிய ) ,
இப்படி ஒரு அடிமையை விட்டு விட்டோமே என்று மேலாளருக்கு வருத்தம் , நம்மகிட்ட இருந்த ஒரே ஒரு அடிமை கம்பனியை விட்டுடமேனு பப்புவிற்கு வருத்தம் ....
தனது ஒப்பந்தத்தை தொடராமல் , வேலையை விட்டு விட்டு செல்ல ஆரம்பித்தான் பப்பு ...
தென்பாண்டி சீமையிலே .... தேரோடும் வீதியிலே ... மான் போல வந்தவனே... யார் அடிச்சாரோ ....
பப்புவின் பயணம் தொடரும் ....
The End .....
-
நமது வாழ்கையில் நிறைய பேர் வந்து செல்கின்றனர் , சிலரை பிடிக்கிறது , மிகவும் பிடிக்கிறது , ஒரு சிலரை உயிருக்கு உயிராக நேசிக்கவும் செய்கிறோம் , வாழ்கை செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்து கொண்டே இருந்த பொது அவர்களின் முக்கியத்துவமோ மதிப்போ நமக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம் அனால் பிரிவு என்ற ஒன்று வரும் பொது மட்டுமே அவர்களின் உண்மையனா மதிப்பு நமக்கு தெரிய வரும் , இருந்த போதும் தனிப்பட்ட ஒரு ஆத்மாவின் பயணம் தனிமையானதே யாரையும் சார்ந்து அது செல்வது இல்லை , இண்டர்நெட்டும் ஜி டால்க் இருக்கும் வரை நம்மள யாராலும் பிரிக்க முடியாது , இதுவரை இந்த தேசத்தில் ( அமீரகம் ) எனக்கு அன்பும் , பாசமும் தந்த எனது நண்பர்கள் அனைவருக்கு நன்றி , இனி நமது அடுத்த பதிவு எனது தாயத்தில் இருந்து வெளிவரும், அனைவருக்கும் , அனைத்திற்கும் நன்றி ....
வியாழன், ஆகஸ்ட் 12, 2010
பொர்ணமி நிலா...!
என்னோட பெயர் விஜய், அன்றைக்கு முதல் நாள் அலுவலகத்துக்கு சென்று இருந்தேன் , எல்லோரை போலவும் பெருசா முன்னேரனும் , இது என்னோட ஆசை , உதவி மார்க்கெட்டிங் அதிகாரியாக பணியில் சேருகிறேன் , நான் ஜெயிக்கணும் ஜெயிப்பேன் இது எனது நம்பிக்கை , எனது இருக்கையில் அமர்ந்தேன் , எனது அருகில் ஒரு பெண் அமர்ந்து இருந்தாள், ரொம்ப அழகா இருந்தால் , எனக்கு பெண்கள் மீது அதிக ஈடுபாடு இல்லை , எனது கணினியில் மூழ்கினேன் , சிறிது நேரத்தில் என்னிடம் வந்தால் அந்த பெண் , தன்னை அறிமுகம் செய்து கொண்டாள் , அவள் பெயர் நிலா , அவள்தான் எனது துறை தலைவர் என்பது அவள் சொல்லித்தான் தெரியும்.
அவள் எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாள் , எவ்வளவு சிக்கலான கஷ்டமான நேரங்களிலும் அவள் முகத்தில் புண்ணகை நிறைந்தே இருக்கும் , யாரிடமும் அதிகம் பேசி எனக்கு பழக்கமில்லை , நானும் எனது கணினியும் தான் பேசிக்கொள்வோம் , நாட்கள் ஓடின கடினமாக உழைக்க ஆரம்பித்தேன் , மதிய வேளையில் தனியே அமர்ந்தே உணவு உண்பேன் , தனிமை எனக்கு பிடித்த ஒன்று , நிலா என்னை சில முறை அழைப்பாள் மதிய சாப்பாடிற்கு , நான் எதையாவது சொல்லி அவளுடம் சாப்பிடுவதை தவிர்த்து விடுவேன் , என்னோடன் வேலை பார்த்த யாருடனும் நான் அதிகம் பேசுவதில்லை, எனக்கு திமிர் பிடித்தவன் , பெருமைக்காரன் , வேறு சில பெயர்களும் அவர்கள் கொடுத்தனர் அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை , நிறைய வாடிக்கையாளர்கள் என்னால் எனது நிறுவனத்துக்கு கிடைத்தனர் , எனக்கு பதவி உயர்வும் கிடைத்தது , எதிலும் பெரிய இருப்பு இல்லாமல் போய் கொண்டு இருந்தது வாழ்கை .
அன்று வெள்ளிகிழமை அனைவரும் நிலாவிடம் சென்று எதோ வாழ்த்து சொல்லுவது போல் இருந்தது , நான் கண்டு கொள்ளவே இல்லை , அன்று மாலை நிலா என்னிடம் வந்தாள்..
விஜய் இன்றைக்கு என்னோட பிறந்தநாள் நீங்கள் கண்டிப்பா நான் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் , நான் முடியாது என்று மறுத்து விட்டேன் , அவளோ விடுவதாக இல்லை , எனது அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை , அவர்களை மருத்துவமனை அழைத்து செல்லவேண்டும் என்று சொல்லி கடைசியில் தப்பித்து கொண்டேன் , அலுவலகம் முடிந்து வீட்டுக்கு சென்று பிறகு இரவில் அம்மாவை கூட்டி கொண்டு வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க வெளியில் போக வேண்டி இருந்தது , அனைத்தையும் வாங்கி முடித்தவுடன் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்து கொண்டு இருந்தேன்.
யாரோ என்னை அழைப்பதை போல் இருந்தது திரும்பி பார்த்தேன் அங்கெ நிலா நின்று கொண்டு இருந்தாள் , என் அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்தேன் , அம்மா உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது , நான் ரொம்ப நல்ல இருக்கேன் என்று அம்மாவிடம் இருந்து பதில் வந்த உடன் , என்னை நோக்கி முறைப்பது போல் பார்த்தாள் , நான் தலையை கீழே குனிந்து கொண்டேன் , பிறகு அவளை பார்க்கவே இல்லை , என்னை தப்பாக நினைத்து இருப்பாள் அதுவும் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை என்று பொய் சொன்னதற்கு ,பிறந்தநாள் என்று சொல்லி என் அம்மாவிடம் ஆசிர்வாதமும் பெற்று கொண்டாள் , பேருந்து வந்ததும் முவரும் ஒரே பேருந்திலேயே சென்றோம் , என் அம்மாவுடன் அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்தாள் , நாங்கள் இறங்கும் நிலையம் வந்தவுடன் நானும் அம்மாவும் நிலவும் இறங்கினோம் , அம்மா சொன்னார்கள் இரவாகி விட்டது அந்த பெண்ணை போய் வீட்டில் விட்டுவிட்டு வா என்றார்கள் , நான் அம்மா பிள்ளை எனது அம்மாவை ரொம்ப பிடிக்கும் அப்பா இல்லை , எனக்காகவே வாழும் எனது அம்மா , நிலா சொன்னால் பரவா இல்லை நான் தனியாகவே போய் விடுகிறேன் என்று பிறகு ஒத்துக்கொண்டால் அவளை அழைத்து சென்றேன் , இருவரும் மௌனமாகவே நடந்தோம் என்னை தப்பாக நினைத்திருப்பாள், பரவ இல்லை என்று எண்ணிக்கொண்டேன் ,
உங்கள் வீடு எங்கே உள்ளது என்று அவளிடம் கேட்டேன் , நான் விடுதியில் தான் தங்கி உள்ளேன் என்றாள் , உங்கள் அம்மா அப்பா எங்கே ? அவர்கள் யார் என்றே தெரியாது நான் ஒரு அநாதை அனால் யாருக்கும் தெரியாது என்றால் சிரித்து கொண்டே , அவளது விடுதி வந்தது , நீங்க போய் விட்டு வங்க என்று சொல்லி உள்ளே சென்றவள் , எனக்கு என்னோட பிறந்த நாள் என்னனு எனக்கே தெரியாது சும்மா நானா இத பிறந்தநாள் அப்படி சொல்லி கொண்டாடுகிறேன் மீண்டும் அதே சிரிப்புடன் உள்ளே சென்றல் நானோ இதயம் கனத்து போய் மரம் போல் அதே இடத்திலேயே நின்று கொண்டு இருந்தேன், சற்று தொலைவில் சென்றவள் என்னை திரும்பி பார்த்தல் , நான் இப்போதுதான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றேன் , அப்பாட இப்போதாவது சொன்னியே நன்றி என்றாள் ...
வீட்டிற்கு வந்து விட்டேன் , மனதெல்லாம் அவளின் நினைவு மட்டும் ஓடியது , அம்மா அழைத்தார்கள் , அவர்களிடம் சென்று என்ன என்று கேட்டேன் , அந்த பொண்ண பாதியப்பா , ரொம்ப அழகா இருக்கின்றாள் , அந்த மாதிரி ஒரு பொண்ணைத்தான் உனக்கு காட்டி வைக்கலாம் என்று நினைக்கின்றேன் , நான் ஒன்றும் பதில் சொல்லாமலேயே திரும்பி வந்தேன் , இரண்டு நாட்கள் விடுமுறை ஓடியது , அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தது , அவளை பற்றி தெரிந்தது கொள்ள வேண்டும் போல இருந்தது , அவளுக்கென்று யாரும் இல்லை என்றபோது எப்போதும் அவளின் சந்தோசத்திற்கு பஞ்சம் இருக்காது .
அன்று திங்கள் கிழமை காலையிலேயே அலுவலகம் சென்று அவளின் வருகைகாய் காத்திருந்தேன் , கலையில் அவள் வரவில்லை , மதியம் அவள் வந்து அவள் இருக்கையில் அமர்ந்தாள் , இன்று அவள் சந்தோசமாக இல்லை என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது , உணவு இடை வெளி வந்தது , அனைவரும் சாப்பிட சென்று விட்டனர் , அவள் மட்டும் அங்கே உட்கார்ந்து இருந்தாள் , நான் அவளிடம் சென்று சாப்பிட போகலாமா என்றேன் , முதல் முதலாய் ஒரு பெண்ணை சாப்பிட அழைத்தேன் , அவளோ பசிக்கவில்லை நீங்கள் பொய் சாபிடுங்கள் என்றாள் , என் கவலையாய் இருப்பது போல் இருக்கிறீர்கள் என்றேன் , ஒன்றும் இல்லை என்றால் , நான் சாப்பிட சென்று விட்டேன் , மாலையில் அவள் முகம் மிகவும் வாடி இருந்தது , என்னிடம் வந்தவள் நீங்கள் இன்று மாலை சும்மா இருந்தாள் என்னோடன் வர முடியுமா என்றாள், நான் சரி என்றேன் , அன்று மாலை அலுவலகம் முடிந்து ஆவலுடன் சென்றேன் .. எங்கே அழைத்து செல்கிறாள் என்னை ...?
அது ஒரு அநாதை ஆசிரமம் , விஜய் இந்தா மாதிரி இடத்துக்கு போய் இருக்கிறாயா? என்று கேட்டால் என்னிடம் , இல்லை என்றேன் , அங்கு நிறைய குழந்தைகள் விளையாடிக்கொ
என்னிடம் அவ்வளவு பணம் இல்லை அதனால் என் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் அனைவரிடம் பணம் கேட்டு பார்த்தேன் அந்த குழந்தைக்காக , எனக்கு கிடைக்கவே இல்லை , அப்போது நண்பன் சொன்ன ஒரு யோசனை எனக்கு உதவியது , எங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பினோம் அதன் பிறகு தேவையான பணம் கிடைத்தது , அதை கொண்டு சென்று நிலவிடம் கொடுத்தேன் , அவளுக்கு என்ன பேசுவதென்றே தெரிய வில்லை , என் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள்,
அந்த குழந்தையின் அருவைசிகிசை முடிந்தது , அந்த குழந்தை பிழைத்து விட்டது , அவளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது , அன்று நல்ல மழை , நான் உனக்காக காத்து கொண்டு இருக்கிறேன் வேகமாக வா ... என்றதுடன் துண்டித்துகொண்டாள் இணைப்பை , அவளுக்காக காத்திருந்தேன் ஒரு பேருந்து நிலையத்தில் , நன்றாக மழை பெய்ய ஆரம்பித்தது , வீதி எங்கும் மழை நீர் , அவள் வந்தாள் , ரொம்ப சந்தசமாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டேன் , என்னை பார்த்தவுடன் வேகமாக ரோட்டை கிராஸ் செய்து என்பக்கம் வருவதற்காக நடந்து வந்து கொண்டு இருந்தாள் , கருப்பு குடை பிடித்து எதோ ஒரு மயில் மழை வந்த சந்தோஷத்தில் இறக்கை விரித்து ஆடுவது போல் , அன்றுதான் அவளின் பேரழகு எனக்கு தெரிந்தது ,
ஒரு துளி மழைநீர் என் முகம் மேல் விழ கண்களை முடிக்கொண்டேன் , அவள் விரல் என் மேல் பட்டது போல் ஒரு உணர்வு , மழை ஜில்லென்ற கற்று மாலை நேரம் அழகான ஒரு பெண் என்னை காண வருகிறாள் என்று நினைத்த பொது உலகமே எதோ எனக்காகவே படைக்க பட்டது போல் உணர்ந்தேன் , திடிரென ஒரு பெண்ணின் சத்தம் கேட்டு கண் களை முழித்து கொண்டேன் , நிலா லாரியில் அடிபட்டு விழுந்தால் , ஒரு நொடி என் கண்களை நம்ப முடிய வில்லை , உலகம் பிரம்மித்து போனது போல ஒரு உணர்வு , அவளை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் , அவள் கையில் வைத்திருந்த பை ஒன்றை என்னிடம் தந்தனர் , அவள் சுய நினைவிற்கு வரவில்லை , அவளது பையில் அவளது டைரி இருந்தது , அதை அடுத்து படிக்க ஆரம்பித்தேன் , விஜய் உன்னை எனக்கு பிடித்து இருக்கிறது , உனது அமைதி , திறமை , பார்வை எல்லாம் , என்னோட பேசு விஜய் , உன்னை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன் , நீ சூரியனாக வந்த பின்புதான் என் உலகம் வெளிச்சம் அடையும் , அவள் கண்முடி மருத்துவமனையில் உறங்கிய போதும் அவள் டைரி என்னிடம் பேசிக்கொண்டு இருந்தது.
நாட்கள் ஓடின அவளுக்கு சுய நினைவு வரவே இல்லை , எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள் என் வீட்டில் , ஏனோ எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை எனக்கு , இன்றைக்கு புதன் கிழமை நான் அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டு இருக்கிறேன் , யாரோ என்னை குபிடுற மாதிரி இருக்கு , ஒரு நிமிஷம் இருக்க பாத்துட்டு உங்களிடம் சொல்லுகிறேன் , அட என் அம்மா தாங்க , என்ன சொள்ளரங்கனு கேக்குறிங்களா , எனக்கு 35 வயசு ஆகிவிட்டதாம் , அதனால கல்யாணம் பண்ணிக்க சொல்லுராங்க , இப்ப நிலவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் , கூடிய விரைவில் அவள் குணமடைந்து விடுவாள் என்பது எனது நம்பிக்கை , நிலா என் மேல் வைத்த நம்பிக்கை , நான் கடவுள் மேல் வைத்த நம்பிக்கை இது இரண்டும் சமகான அளவு வரும் பொது நான் கண்டிப்பா ஜெயிப்பேன் , பத்து வருடமாக நான் காத்திருந்ததற்கு கடவுள் எனக்கு கண்டிப்பா வெற்றி கொடுப்பார் , எனக்கு அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது போய் விட்டு வருகிறேன் ......
அதுவரை நமது புண்ணகை பயணம் தொடரும் ....
அன்புடன்...
புண்ணகைதேசம் சிவா
குறிப்பு:
சமிபத்தில் நான் ஷர்ஜாஹ் வில் சந்தித்த ஒருவரின் கதை இது , எனது வலைப்பதிவில் தோல்வியான எதையும் சொல்லகூடாது என்பதற்காகவே கதையை மாற்றினேன் , உண்மையில் அந்த பெண் அடிபட்ட இடத்திலேயே இறந்து விட்டாள் , அவரோ சிவ தீட்சை வாங்கி கொண்டு , திருமணம் செய்யாமலே வாழ்கிறார் 45 வயது ஆகியும் , இன்று பெரிய நிறுவனம் ஒன்றின் முதன்மை அதிகாரி அவர் , உடல் ஆசைக்காக காதலை பெண்கள் மீது வீசும் நாய்கள் மத்தியில் இப்படிப்பட்டவர்களை என்ன சொல்வது ?
அவரது அம்மாவும் அவரை விட்டு சென்று விட்டார்
இப்போது இவருக்கென்று யாரும் இல்லை , நானும் ஒரு அநாதை என்று சிரிக்கிறார்
மாதம் மாதம் அநாதை குழந்தைகளுக்கு உதவுவதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை ....
திங்கள், ஜூலை 12, 2010
ஒரு தேவதையின் கண்ணீர்....
ஒரு பேருந்து பயணத்தில் என்னக்கு ஏற்பட்ட மறக்க முடியாத நினைவு அது , கல்லூரியில் சேர்ந்து விட்டு திரும்பிக்கொண்டு இருந்தேன் , காரைக்குடி வந்ததும் வேறு ஒரு பேருந்துக்கு மாறவேண்டும் , கையில் ஆனந்த விகடன் அட்டையில் விஜய் படம் , காலை மதியம் இரண்டு வேலையும் நல்ல இருந்தாலும் பேருந்தில் போகும் பொது பசி வந்தாள் என்ன பண்ணுவது? முன்று மணிநேரம் நிறுத்தாமல் வண்டி போகும் அதனால் போய் சாப்பிட எதாவது வாங்கி வைத்து கொள்ளலாம் என்று முடிவு பண்ணி, பேருந்து புறப்படுவதற்குள் போய் வாங்கி கொண்டு வந்து விட்டேன் , அதிகமான ஒன்னும் இல்ல ஒரு பாட்டில் பெப்சி , பிஸ்கட் , சிப்ஸ் , சக்கலேட் அவளவுதான் இதுக்குமேல நம்ம வயறு தாங்காது மதியம் வேற சிக்கன் பிரியாணி வெயிட் டா சாப்பிடாசு , கைகள் புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தன , பேருந்தில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது ஒருவர் ஒருவராக பேருந்தில் ஏறி உட்கார ஆரம்பித்தார்கள் ,
அப்போது ஒரு பெண் குழந்தை ஒரு ஐந்து வயது இருக்கும் என்னை நோக்கி வந்தாள் , அலுக்கு சட்டை , மூக்கு வலிந்து கொண்டு அதை கையால் துடைத்து கொண்டே , யாரோ தின்று விட்டு தூக்கி போட்ட சாக்லேட் கவரை வாயில் கடித்து கொண்டு , என்னை நோக்கி அந்த குழந்தை, அண்ணா பசிக்குது என்று கையை நீட்டியது , நானும் பர்சில் தேடி பிடித்து சில்லறை எடுத்து கொடுத்து விட்டேன் , ஒரு புன்னைகையோடு இரு கை கூப்பி வணங்கினாள்,
எனக்கு பின்னல் இருந்த ஐம்பது வயது மதிக்க பெண் ஒருவர் தனக்கு அருகாமையில் இருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தார் , அவ வீடு கல்யாணத்துக்கு வந்தேன், என்ன? பந்தி வச்சாங்க முன்று முறைக்கு மேல சாப்பாடு வைக்கவே இல்ல , இந்த பெண் குழந்தை அந்த அம்மாவிடம் போய் அம்மா பசிக்குது என்று கையை நீடினால் , உடனே அந்த அம்மா சீறி பாய தொடங்கினார் , இந்த சனியனுகளுக்கு வேற பிச்சை பிச்சைன்னு நம்ம உயிரை எடுக்குதுங்க , அய் அந்த பக்கம் போடி என்று எந்த பெண் குழந்தையை விரட்ட ஆரம்பித்தனர் , அம்மா பசிக்குதுமா என்று சோக முகத்துடன் கெஞ்ச ஆரம்பித்தாள் அந்த பெண் குழந்தை, வசை மொழி மட்டும் கிடைத்தது( இந்த அம்மாவுக்கு இந்த வயதில் ஒரு பேர குழந்தை இருந்து ,அது இப்படி பிச்சை எடுத்தால் எப்படி இருக்கும் ) .
அதற்கு பிறகு உட்கார்ந்து இருந்த கனவான்களும் அந்த பெண்குழந்தையை விரட்ட ஆரம்பித்தனர்( இப்போதுள்ள பெண்களுக்கே இறக்கம் இல்லாமல் போய் விட்டது ஆண்களுக்கு இருக்குமா என்ன..? )
அவள் பேருந்தை விட்டு கீழே இறங்கினாள் , பேருந்துக்கு கீழே யாரோ பேசுவது கேட்டது , ( அந்த பெண் குழந்தையை பிச்சை எடுக்க வைப்பவள் ) ஏண்டி மூணு வேலை நல்ல கொட்டி கொள்கிறாய் , போய் அழுது கிட்டே காசு கேளுடி , அப்பதான் நிறைய காசு கொடுப்பாங்க என்றாள் , அதற்கு அந்த பெண் குழந்தை : எனக்கு பசிக்குது காலையிலும் நான் சாப்பிடவில்லை உண்மையாகவே ரொம்ப பசிக்குது என்றாள் அழுது கொண்டே , உனக்கு சாப்பாடெல்லாம் கிடையாது, பெரிய கலெக்டர் வீட்டு குழந்தை இவள் , போய் ஒரு 50 rs யாவது வாங்கிட்டு வந்து உனக்கு சாப்பாடு .எனக்கு பின்னல் இருந்த ஐம்பது வயது மதிக்க பெண் ஒருவர் தனக்கு அருகாமையில் இருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தார் , அவ வீடு கல்யாணத்துக்கு வந்தேன், என்ன? பந்தி வச்சாங்க முன்று முறைக்கு மேல சாப்பாடு வைக்கவே இல்ல , இந்த பெண் குழந்தை அந்த அம்மாவிடம் போய் அம்மா பசிக்குது என்று கையை நீடினால் , உடனே அந்த அம்மா சீறி பாய தொடங்கினார் , இந்த சனியனுகளுக்கு வேற பிச்சை பிச்சைன்னு நம்ம உயிரை எடுக்குதுங்க , அய் அந்த பக்கம் போடி என்று எந்த பெண் குழந்தையை விரட்ட ஆரம்பித்தனர் , அம்மா பசிக்குதுமா என்று சோக முகத்துடன் கெஞ்ச ஆரம்பித்தாள் அந்த பெண் குழந்தை, வசை மொழி மட்டும் கிடைத்தது( இந்த அம்மாவுக்கு இந்த வயதில் ஒரு பேர குழந்தை இருந்து ,அது இப்படி பிச்சை எடுத்தால் எப்படி இருக்கும் ) .
அதற்கு பிறகு உட்கார்ந்து இருந்த கனவான்களும் அந்த பெண்குழந்தையை விரட்ட ஆரம்பித்தனர்( இப்போதுள்ள பெண்களுக்கே இறக்கம் இல்லாமல் போய் விட்டது ஆண்களுக்கு இருக்குமா என்ன..? )
வயிற்றில் பசி கண்களில் கண்ணீர் மூலையை செயலிழக்க வைக்கும் வெயில் , உலகம் இருண்டதை போல அந்த பெண் குழந்தை உணர்திருக்க கூடும் , அந்த குழந்தை தான் ஏற்கனவே இந்த பேருந்தில் ஏறியதை மறந்து ஏறிவிட்டால் , பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் திட்ட ஆரம்பித்தார்கள் அந்த பெண் குழந்தையை , கீழே இறங்கியவள், ரொம்ப பசிக்குது என்று அழுது கொண்டே சென்றாள்.
சில சமயங்களில் மட்டும் நம் வாய் மூடப்படமலேயே ஊமையாகிறோம் , கை கட்டமலையே கை காட்டி வேடிக்கை பார்க்கிறோம் என்பது மட்டும் புரிந்தது, பேருந்து கிளம்பியது , கையில் இருந்த பிஸ்கட் யாவது அவளுக்கு கொடுத்திருக்கலாம் , அவள் கண்ணீருடன் வேறு ஒரு பேருந்தில் "அம்மா பசிக்குது " என்று கை நீட்டுவதை தொடர்ந்தாள் ……..
அவள் என் நினைவில் சிம்மாசம் இட்டு புன்னகையுடன் உட்கார்ந்த பொது .... என் மொபைல் ஒலித்ததை என்னால் உணரமுடிந்தது , என் அம்மா , சாப்பிடு விட்டாயா ....? நான் நல்ல சப்பிடுடேனம்மா ஆனா ....?
இது யார் செய்த குற்றம் ..? ஒரு திருடன் , ஒரு விபச்சாரி , இவர்களின் பின்னல் மறைக்க பட்ட இது போன்ற ஒரு கதை இருக்கும் , இதெற்கெல்லாம் முடிவு சமுதாயம் தான் சொல்ல வேண்டும் நீங்கள் தான் சமுதாயம் , பதில் சொல்லுங்கள் ......
வியாழன், ஜூலை 01, 2010
நிலா..!
அதோ நிலவை பார்
ஒருவாய் சாப்பிடு
என் கண்ணே
உணவளிதாள் அம்மா
அன்று நிலவை காட்டி ..!
நேற்று நிலா
என்றால் அம்மா
ஊட்டிய சோற்றின்
யாபகம் ...!
யார் நிலவில்
இருப்பார்கள்
பாட்டி வடை
சுட்டு விற்கிறாள்
அங்கெ..!
இன்று நிலா என்றால்
அவளின் முகம்
என்னை பார்த்து
புண்ணகைக்கும் பொது
பொர்ணமியாய்...
ஏன் இவ்வளவு வெட்கம்
என்னை கண்டவுடன்
மேக கூடத்திற்குள்
சென்று உன்னை
மறைத்து கொள்கிறாய் ..!
உனது வெட்கம்
தாங்காமல்
மழையாய் பெய்கிறது
மேகம் என் மேல் ...
காதல் மழையில்
நனைகிறேன் நான்
துரத்தில் நின்று
சிரித்து கொண்டு
இருக்கிறாய் ஒன்றுமே
தெரியாதது போல்
நிலவாய்...!
ஒரு இரவில்
உன் மீது வந்த
காதல் ...
வெயிலை வென்று
எடுத்த மழையின்
வெற்றி ....
என் ஆண்மையை
வென்ற உந்தன்
வெற்றி ...
கண்கள் மூடி
உன்னை நினைத்தாள்
உன்னை கைகளில்
பிடித்துவிடுகிறேன்
கண்களை விழித்து
பார்த்த போதுதான்
உணர்ந்தேன் நீ
என்னிடம் இல்லை ..!
நானும் என்னிடம்
இல்லை ,
என்னை உன்னில்
தொலைத்து விட்டு
தேடி அலைகிறேன்
விண்வெளியில் ...
குறிப்பு : எப்போ நிலவை பார்த்தாலும் , ஒரு பொண்ணு என்னை பார்த்து சிரிக்கிற மாதிரியே இருக்கு ....
ஞாயிறு, ஜூன் 27, 2010
வீரம்...!
வீரம்
வாணம் மழைக்கு பதிலாய்
இடியை நாம் தலையில்
விழுந்தால் என்ன ?
நாமே இடி தாங்கி
நம்மில் சிக்கி
இடி சிதறட்டும்...!
கடல் அலைக்கு பதிலாய்
சுனாமியாய் நம்மை
அடித்து சென்றால் என்ன ?
நாமே தீப்பிழம்பு
கடலையே ஆவியாக்கி
அனுப்பிடுவோம் வானிற்கு ...!
காற்று தென்றலாய்
வருவதற்கு பதிலாய்
புயலாய் வந்தால் என்ன ?
நாமே சுறாவளி
புயலை வீசி எறிவோம் ..!
யார் நம்மை விட்டு
போனால் என்ன ?
யார் நம்மிடம்
வந்தால் என்ன ?
நாமே வழிப்போக்கர்கள் ...!
வாழ்க்கை போர்கலமாகிப்போனால்
பயந்து ஓட கொலைகள் இல்லை
போர்தொடுப்போம் வீரத்தோடு
ஆயிரம் இடைஞ்சல்கள் வந்த போதும்
மாறாத நமது நம்பிக்கையுடன் ...!
உங்க வாழ்க்கைல எங்கேயாவது பிரச்சனை வந்த கவலை படாதிங்க ..., அத ஒரு சவால எடுத்துகங்க , ஆயிரம் பேரு நம்ம வாழ்க்கைல வந்து போய்கிட்டே இருப்பாங்க அதுக்காக பெருசா கவலை பாடவும் தேவை இல்லை , என்னா நாமே நமக்கு சொந்தம் இல்லை ....
-
என்னா திருப்பி அடிக்கலாமா...? இனி டரியல் ஆரம்பம் ...!
செவ்வாய், ஜூன் 22, 2010
உயிர்...!
குமார் இவர் ஒரு தனியார் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் ப்ராஜெக்ட் மேனேஜர் , அன்று வழக்கமான தனது பணியில் தீவிரமாக இருந்தார் , அவருடைய மொபைல் சைலென்ட் மோடில் இருந்தது , மணியை பார்க்காமல் வேலை செய்யும் சில வல்லுனர்கள் போலவே இவரும் இருந்தார் , எழுந்து வீட்டுக்கு போகலாம் என்று எண்ணி எழுந்தார் அப்போது மணி இரவு 8 :30 ஆகி இருந்தது , அப்போது வேலை நிமிர்த்தமான அழைப்பு வர மீண்டும் அமர்ந்தார் , எதற்சையாக அவரது மொபைல் எடுத்து பார்த்த பொது தெரிந்தது ,
அவரது வீட்டில் இருந்து 20 மிஸ் கால்கள், அதிர்ந்தார் குமார் என் இவ்வளவு மிஸ் கால்கள் வீட்டில் இருந்து , ஒரு sms வந்து இருந்தது , அதில் " Come Fast " என்ற வரி மட்டும் இருந்தது , வேகமாக கிளம்பினார் குமார் , அவரின் முத்த அதிகாரி அவரை அழைத்தார் , குமார் வீட்டுக்கு போக வேண்டும் என்றார் , முத்த அதிகாரி வேலையை முடித்து விட்டு போ என்றார் , இருக்கையில் அமர்ந்தார் குமார் மீண்டும் கைகள் செல்பேசி நோக்கி போயின , என்ன ஆயிற்று , குமாரின் மணம் பதற ஆரம்பித்தது , வேகமாக எழுந்து நடந்தார் தனது கார் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி , வீட்டில் தனியாக இருந்த நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவியின் மொபைல் போனுக்கு முயற்சி செய்த படியே , மொபைல் " No Answer " என்ற பதில் வந்தது , என்ன ஆனது குமாரின் மனைவிக்கு ...,
செல்லும் வழியில் தன்னை தானே நொந்து கொண்டார் குமார் , நான் தப்பு செய்து விட்டேன் , நிறை மாத கர்ப்பிணியான எனது மனைவியை பார்த்து கொள்ளாது எனது தவறு , பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது குமாருக்கு , குமாரின் செல்பேசி சிணுங்க ஆரம்பித்தது , மறு முனையில் அவரின் முத்த அதிகாரி , தாங்கள் ஏன் வேலையை முடிக்காமல் சென்றீர்கள் நாளை இதற்கான விளக்கம் வேண்டும் என்றதுடன் இணைப்பை துண்டிதுக்கொண்டர் , குமாரின் கோபம் தலைகேறியது அவரது காரின் வேகமும் கூட , செல்லும் வழியெல்லாம் தனது மனைவியின் செல்பேசிக்கு முயற்சி செய்து கொண்டே சென்றார் , பதில் எதுவும் வரவில்லை , வீடும் வந்து விட்டது , காரில் இருந்து இரங்கி வேகமாக ஓடி சென்று பார்த்தார் குமார் , தான் மனைவிக்கு என்ன ஆகிற்று ....?
வீட்டின் அணைத்து பகுதியிலும் தேட ஆரம்பித்தார் குமார் , எங்கே அவள் ? சமையல் அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள், குமாரின் பதற்றம் அதிகமானது , எந்த அசைவும் இல்லை குமாரின் மனைவியிடம் , தனது மனைவியை மடியில் வைத்து சுய நினைவிற்கு கொண்டு வர முயற்சித்தார் குமார், எந்த பயனும் இல்லை , தனது மனைவியை தூக்கி சுமந்த படியே காருக்கும் , காரில் மருத்துவ மனைக்கும் செல்ல ஆரம்பித்தார் , காரின் வேகம் அதிகரித்தது , அதற்குள் சிக்னல் ஒன்றில் சிவப்பு விளக்கு விளவே நொந்து போனார் குமார் , கண்களில் கண்ணீர் , தனது வெள்ளை சட்டை முழுவதும் மனைவியின் ரத்தம் , பச்சை சிக்னல் விளவே மீண்டும் காரின் வேகம் கூடியது , மருத்துவ மனையும் வந்தது , வேகமாக ஹரேன் அடித்தார் யாரும் வர வில்லை , மருத்துவமனையின் வாயிலில் போய் தட்டி பார்த்தார் யாரும் வர வில்லை , மருத்துவமனை தொலை பேசி எண்ணுக்கு அழைத்து பார்த்தார் எந்த பதிலும் இல்லை , மணி 12 :00 இரவு , அனைவரும் உறங்கிக்கொண்டு இருப்பார்கள் , குமாரின் கண்கள் நீர் வெள்ளத்தில் தனது மனைவியை பார்த்தது ,என்ன செய்வது ...?
மருத்துவமனை சுவரை எப்படியாவது தண்டி உள்ளே இருக்கும் மருத்துவரை அழைத்து வரலாம் , சுவரின் உயரமோ குமாரின் உயரத்தை விட அதிகமாக இருந்தது , தனது காரை எடுத்து சுவரின் ஓரம் நிறுத்தி அதன் மீது ஏறி மருத்துவமனையின் உள்ளே குதித்தார் , சுவற்றில் அவர் உரசி கை கால் எல்லாம் ஒரே சிராய்ப்பு , குமாரின் கை கால்களில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது , குமாருக்கு தெரியவில்லை தனக்கு ரத்தம் வருவது கூட , உள்ளே இருந்த மருத்துவரை அழைத்து வந்தார் , மருத்துவமனை வாயில் திறக்கப்பட்டது , குமாரின் மனைவி தீவிர சிகிசை பிரிவில் அனுமதிக்க பட்டார் ..., தனது மனைவியும் குழந்தையும் தன்னிடமே வர வேண்டும் என்று வேண்டி கொண்டார் , தான் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்க பாட்டு இருப்பதை தனது தாய் தந்தையருக்கு தொலை பேசியில் அழைத்து சொல்லி இருந்தார் , குமாரின் மனைவியின் தாய் தந்தைக்கும் கூட ...,
மருத்துவர் வெளியில் வந்தார் , குமாரின் உயிர் அவரிடமே இல்லை , மருத்துவரின் கைகளை பற்றி கொண்டு குமார் கேட்டார் தனது மனைவியின் ஆரோக்கியம் பற்றி , உங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது , என் மனைவி ..? என்றார் குமார் , அவர்கள் இன்னமும் சுய நினைவு திரும்ப இல்லை , காலை 6 :00 மணிக்குதான் எதுவும் சொல்ல முடியும் என்றர் மருத்துவர் , குமாரிடம் அவரின் குழந்தையை குடுத்தார்கள் ,
குழந்தையை வாங்கிய குமார் நீர் நிரம்பிய கண்களுடன் தனது மனைவியையே பார்த்து கொண்டு இருந்தார் , பொழுது விடிந்தது குமாரின் உறவினர்கள் அனைவரும் வந்து விட்டனர் , மருத்துவர் வெளியே வந்தார் , குமாரின் நெஞ்சம் பட படக்க ஆரம்பித்தது , தனது மனைவி இல்லாத உலகை குமாரால் நினைத்து கூட பார்க்க முடியாது , நீங்கள் மட்டும் போய் உங்கள் மனைவியை பார்க்கலாம் , டாக்டர் ,பயத்துடன் குமார், ஒன்னும் இல்லை போய் பாருங்கள் , குமார் தனது மனைவி இருந்த அறைக்குள் நுழைந்தார் , சூரியன் ஒளிதர கிளம்பியது , சூரிய ஒளி அறைக்குள் வந்தது கண் விழித்தல் குமாரின் மனைவி , இப்போதுதான் உயிர் வந்தது குமாருக்கு , மனிவியின் கைகளை பற்றி கொண்டார் குமார் , என்னை மன்னித்து விடு என்று சிறு பிள்ளை போல அழ ஆரம்பித்தார் , குமார் மனைவின் கைகள் குமாரின் கண்ணீர் துடைக்க ஆரம்பித்தன , வேகமாக சென்று தனது குழந்தையை வங்கி வந்து மனைவியிடம் கட்டினார் குமார் , குழந்தையுடன் தனது மனைவியின் நெற்றியில் முத்தமிட்டார் குமார் ...,
இன்னம் ஒரு வரம் கழித்து நீங்கள் வீட்டுக்கு போகலாம் என்றர் மருத்துவர் ..,
அந்த ஒருவாரம் குமார் அலுவலகம் செல்லவே இல்லை ...,
வீட்டுக்கு வந்த பிறகு குமார் தனது கணியில் , தனது ஈமெயில் பார்த்து கொண்டு இருந்தார் , அதில் ஒரு மெயில் அவருடைய அலுவலகத்தில் இருந்து , என் வரவில்லை அலுவலகத்திற்கு எங்களுக்கு விளக்கம் வேண்டும் என்று இருந்தது , அவரருகில் அவரது மனைவி வந்து அமர்ந்தார் , எதார்த்தமாக தனது கணவனின் கை கால்களில் காயம் இருப்பதை கண்டு அதிர்ந்து எப்படி வந்தது என்று கேட்டார் நடந்ததை சொல்லி முடித்தார் குமார் , குமார் மனைவியின் கண்கள் நீரால் நிரம்பின , குமாரின் நெற்றியில் முத்தமிட்டு " I LOVE you " என்றார்...,
அலுவலகத்தில் இருந்து வந்த மைலுக்கு பதில் குடுத்தார் குமார் எனது வேலையை நான் ராஜினாமா செய்கிறேன் ....,
குறிப்பு : இது ஒரு உண்மை கதை ....,
அவரது வீட்டில் இருந்து 20 மிஸ் கால்கள், அதிர்ந்தார் குமார் என் இவ்வளவு மிஸ் கால்கள் வீட்டில் இருந்து , ஒரு sms வந்து இருந்தது , அதில் " Come Fast " என்ற வரி மட்டும் இருந்தது , வேகமாக கிளம்பினார் குமார் , அவரின் முத்த அதிகாரி அவரை அழைத்தார் , குமார் வீட்டுக்கு போக வேண்டும் என்றார் , முத்த அதிகாரி வேலையை முடித்து விட்டு போ என்றார் , இருக்கையில் அமர்ந்தார் குமார் மீண்டும் கைகள் செல்பேசி நோக்கி போயின , என்ன ஆயிற்று , குமாரின் மணம் பதற ஆரம்பித்தது , வேகமாக எழுந்து நடந்தார் தனது கார் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி , வீட்டில் தனியாக இருந்த நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவியின் மொபைல் போனுக்கு முயற்சி செய்த படியே , மொபைல் " No Answer " என்ற பதில் வந்தது , என்ன ஆனது குமாரின் மனைவிக்கு ...,
செல்லும் வழியில் தன்னை தானே நொந்து கொண்டார் குமார் , நான் தப்பு செய்து விட்டேன் , நிறை மாத கர்ப்பிணியான எனது மனைவியை பார்த்து கொள்ளாது எனது தவறு , பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது குமாருக்கு , குமாரின் செல்பேசி சிணுங்க ஆரம்பித்தது , மறு முனையில் அவரின் முத்த அதிகாரி , தாங்கள் ஏன் வேலையை முடிக்காமல் சென்றீர்கள் நாளை இதற்கான விளக்கம் வேண்டும் என்றதுடன் இணைப்பை துண்டிதுக்கொண்டர் , குமாரின் கோபம் தலைகேறியது அவரது காரின் வேகமும் கூட , செல்லும் வழியெல்லாம் தனது மனைவியின் செல்பேசிக்கு முயற்சி செய்து கொண்டே சென்றார் , பதில் எதுவும் வரவில்லை , வீடும் வந்து விட்டது , காரில் இருந்து இரங்கி வேகமாக ஓடி சென்று பார்த்தார் குமார் , தான் மனைவிக்கு என்ன ஆகிற்று ....?
வீட்டின் அணைத்து பகுதியிலும் தேட ஆரம்பித்தார் குமார் , எங்கே அவள் ? சமையல் அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள், குமாரின் பதற்றம் அதிகமானது , எந்த அசைவும் இல்லை குமாரின் மனைவியிடம் , தனது மனைவியை மடியில் வைத்து சுய நினைவிற்கு கொண்டு வர முயற்சித்தார் குமார், எந்த பயனும் இல்லை , தனது மனைவியை தூக்கி சுமந்த படியே காருக்கும் , காரில் மருத்துவ மனைக்கும் செல்ல ஆரம்பித்தார் , காரின் வேகம் அதிகரித்தது , அதற்குள் சிக்னல் ஒன்றில் சிவப்பு விளக்கு விளவே நொந்து போனார் குமார் , கண்களில் கண்ணீர் , தனது வெள்ளை சட்டை முழுவதும் மனைவியின் ரத்தம் , பச்சை சிக்னல் விளவே மீண்டும் காரின் வேகம் கூடியது , மருத்துவ மனையும் வந்தது , வேகமாக ஹரேன் அடித்தார் யாரும் வர வில்லை , மருத்துவமனையின் வாயிலில் போய் தட்டி பார்த்தார் யாரும் வர வில்லை , மருத்துவமனை தொலை பேசி எண்ணுக்கு அழைத்து பார்த்தார் எந்த பதிலும் இல்லை , மணி 12 :00 இரவு , அனைவரும் உறங்கிக்கொண்டு இருப்பார்கள் , குமாரின் கண்கள் நீர் வெள்ளத்தில் தனது மனைவியை பார்த்தது ,என்ன செய்வது ...?
மருத்துவமனை சுவரை எப்படியாவது தண்டி உள்ளே இருக்கும் மருத்துவரை அழைத்து வரலாம் , சுவரின் உயரமோ குமாரின் உயரத்தை விட அதிகமாக இருந்தது , தனது காரை எடுத்து சுவரின் ஓரம் நிறுத்தி அதன் மீது ஏறி மருத்துவமனையின் உள்ளே குதித்தார் , சுவற்றில் அவர் உரசி கை கால் எல்லாம் ஒரே சிராய்ப்பு , குமாரின் கை கால்களில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது , குமாருக்கு தெரியவில்லை தனக்கு ரத்தம் வருவது கூட , உள்ளே இருந்த மருத்துவரை அழைத்து வந்தார் , மருத்துவமனை வாயில் திறக்கப்பட்டது , குமாரின் மனைவி தீவிர சிகிசை பிரிவில் அனுமதிக்க பட்டார் ..., தனது மனைவியும் குழந்தையும் தன்னிடமே வர வேண்டும் என்று வேண்டி கொண்டார் , தான் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்க பாட்டு இருப்பதை தனது தாய் தந்தையருக்கு தொலை பேசியில் அழைத்து சொல்லி இருந்தார் , குமாரின் மனைவியின் தாய் தந்தைக்கும் கூட ...,
மருத்துவர் வெளியில் வந்தார் , குமாரின் உயிர் அவரிடமே இல்லை , மருத்துவரின் கைகளை பற்றி கொண்டு குமார் கேட்டார் தனது மனைவியின் ஆரோக்கியம் பற்றி , உங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது , என் மனைவி ..? என்றார் குமார் , அவர்கள் இன்னமும் சுய நினைவு திரும்ப இல்லை , காலை 6 :00 மணிக்குதான் எதுவும் சொல்ல முடியும் என்றர் மருத்துவர் , குமாரிடம் அவரின் குழந்தையை குடுத்தார்கள் ,
குழந்தையை வாங்கிய குமார் நீர் நிரம்பிய கண்களுடன் தனது மனைவியையே பார்த்து கொண்டு இருந்தார் , பொழுது விடிந்தது குமாரின் உறவினர்கள் அனைவரும் வந்து விட்டனர் , மருத்துவர் வெளியே வந்தார் , குமாரின் நெஞ்சம் பட படக்க ஆரம்பித்தது , தனது மனைவி இல்லாத உலகை குமாரால் நினைத்து கூட பார்க்க முடியாது , நீங்கள் மட்டும் போய் உங்கள் மனைவியை பார்க்கலாம் , டாக்டர் ,பயத்துடன் குமார், ஒன்னும் இல்லை போய் பாருங்கள் , குமார் தனது மனைவி இருந்த அறைக்குள் நுழைந்தார் , சூரியன் ஒளிதர கிளம்பியது , சூரிய ஒளி அறைக்குள் வந்தது கண் விழித்தல் குமாரின் மனைவி , இப்போதுதான் உயிர் வந்தது குமாருக்கு , மனிவியின் கைகளை பற்றி கொண்டார் குமார் , என்னை மன்னித்து விடு என்று சிறு பிள்ளை போல அழ ஆரம்பித்தார் , குமார் மனைவின் கைகள் குமாரின் கண்ணீர் துடைக்க ஆரம்பித்தன , வேகமாக சென்று தனது குழந்தையை வங்கி வந்து மனைவியிடம் கட்டினார் குமார் , குழந்தையுடன் தனது மனைவியின் நெற்றியில் முத்தமிட்டார் குமார் ...,
இன்னம் ஒரு வரம் கழித்து நீங்கள் வீட்டுக்கு போகலாம் என்றர் மருத்துவர் ..,
அந்த ஒருவாரம் குமார் அலுவலகம் செல்லவே இல்லை ...,
வீட்டுக்கு வந்த பிறகு குமார் தனது கணியில் , தனது ஈமெயில் பார்த்து கொண்டு இருந்தார் , அதில் ஒரு மெயில் அவருடைய அலுவலகத்தில் இருந்து , என் வரவில்லை அலுவலகத்திற்கு எங்களுக்கு விளக்கம் வேண்டும் என்று இருந்தது , அவரருகில் அவரது மனைவி வந்து அமர்ந்தார் , எதார்த்தமாக தனது கணவனின் கை கால்களில் காயம் இருப்பதை கண்டு அதிர்ந்து எப்படி வந்தது என்று கேட்டார் நடந்ததை சொல்லி முடித்தார் குமார் , குமார் மனைவியின் கண்கள் நீரால் நிரம்பின , குமாரின் நெற்றியில் முத்தமிட்டு " I LOVE you " என்றார்...,
அலுவலகத்தில் இருந்து வந்த மைலுக்கு பதில் குடுத்தார் குமார் எனது வேலையை நான் ராஜினாமா செய்கிறேன் ....,
குறிப்பு : இது ஒரு உண்மை கதை ....,
வியாழன், ஜூன் 10, 2010
காலை தென்றல்..!
சோம்பல் முறித்து எழுந்தேன்
மணி 6 , மணக்கண் ஓட்டத்தில்
அம்மா தோழி அப்பா தம்பி தோழன்
யாரும் அருகில் இல்லை
இன்றைய தினத்தை எனக்கு
அருளிய இறைவா நன்றி
தூக்கம் தொலையாமல்
என்னுடன் ஒட்டிக்கொள்ள
நடக்கின்ற கால்கள்
காலைகடன் முடிக்க
முகம் பார்க்க கண்ணாடி
என்னை எனக்கு மட்டும்
அழகாய் காட்டும் அற்புத படைப்பு
நேரமாக நேரமாக
வேகமாக கிளம்ப
தயாராகிறேன் அவளை காண
யார் அவள் ..?
வானோர் வியக்கும்
அழகுக்கும் ,
விண்ணை பிளக்கும்
சிரிப்புக்கும்
சொந்தக்காரி
பூ தலையில் வைத்தல்
வாடிவிடும் என்று
செடியிலேயே வைத்து
அழகு பார்ப்பவள்
எதை சொன்னாலும்
இரண்டு முறை
சொல்லுவாள்
என்னை முட்டாள்
என்று நினைதலோ
காந்த கதிர்வீச்சை
முதல் முறையாய்
உணர முடிந்தது
அவளது பார்வையில் தான்
எங்கே சென்று இருப்பால்
என் தேவதை ...!
அவள் வேற யாரும் இல்லை
பள்ளி ஊர்திக்காக காத்திருக்கும்
முன்று வயது பெயர் கூட
தெரியாத அவள் ...!
ஒரு முயல் குட்டிக்கு பாக்
மட்டி விட்டு படிக்க
சொல்லிகிறார்கள்
நீ படித்ததை விட
கற்று கொடுத்தது
அதிகம் ...
தொடரும் பயணம்
அவள் நினைவில்
அவள் சிந்திய புன்னகையுடனே...
-
அவளை பார்த்த சந்தோஷத்தில் , சென்றேன் அலுவலகத்துக்கு , புன்னகையுடன்...
ஞாயிறு, ஜூன் 06, 2010
நாய் குட்டி நட்பு...
ஒரு ஐந்து வயது இருக்கும் எனக்கு , நல்ல மழைக்காலம் , வீட்டுக்கு பக்கத்தில் ஒரு கூரை வீடு , அதற்கு பக்கத்தில் மழையில் நனைந்து விளையாடியது போல் யாபகம், அப்போது என் நண்பனின் அப்பா அவன் மழையில் நனைவதை பார்த்து விட்டு , ஒரு கம்புடன் அவனை நோக்கி வந்தார் , டாய் உங்க அப்பா கம்போட வருகிறார் என்ற சத்தம் கேட்க நண்பன் சிட்டாய் பறந்தான் நானும் அவனுடன் சேர்ந்து , கூரை வீட்டில் போய் ஒளிந்து கொண்டோம், நண்பனின் அப்பா நண்பனை தேடி விட்டு சென்று விட்டார் ,
கூரை வீட்டின் உள்ளே சின்னதாய் ஒரு சத்தம் , உள்ளே போய் பாக்கலாம் என்றான் நண்பன் , இல்லை வேண்டாம் என்றேன் நான் , உள்ளே நுழைந்தான் நண்பன் , ஏய் நாய் குட்டிடா , அங்கே இருந்த அனைவரும் வேகமாய் கூரை வீடுக்குள் ஓடினோம் , ஆள் ஆளுக்கு ஒரு நாய் குட்டியை எடுக்க , கடைசியாய் ஒரு நாய் குட்டி இருந்தது அதை நான் எடுத்தேன் , நண்பன் சொன்னான் , அது பொட்ட நாய் டா அதையா வளர்க்க போகிறாய் , இல்லடா இது ஆண் தான் என்றேன் , நல்ல கீழே தூக்கி பாரு உனக்கே தெரியும் , பெண் நாய் தான் அது , கஷ்டமாகி விட்டது எனக்கு , இருந்தாலும் பரவ இல்லை .. அந்த நாய் குட்டிய எனக்கு ரொம்ப புடிச்சு இருந்ததது .
வீட்டில் மாடிபடிக்கு கீழே உள்ள ஒரு சின்ன அறையில் அந்த நாய்க்குட்டியை வளர்க்க ஆரம்பித்தேன் , எப்படி அதுக்கு பால் உற்றுவது, ஒரு யோசனை , அம்மா காலையிலும் மாலையிலும் நமக்கும் காபி தருவாங்க அதை வேண்டாம் என்று சொல்லி விட்டு , பாலை மட்டும் கேட்டு வாங்கி , அந்த நாய்க்கு கொடுத்திரலாம் , நான் சாப்பிடுவதில் பாதி என் நாய் குட்டிக்கு போய் விடும் , நான் சாகும் வரை என் நாய் குட்டியும் என்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு , நாட்கள் ஓடின என் நாய்குட்டி வளர ஆரம்பித்தது ,
ஒரு நாள் இரவில் நன்கு உறங்கி கொண்டு இருந்தேன் , இடியுடன் மலை பெய்து கொண்டு இருந்தது , உறக்கத்தில் இருந்து திடிரென விழித்தேன் , என் நாய்குட்டி மழையில் நனைந்து கொண்டு இருக்குமே , இடியில் பயந்து போய் இருக்கும் , அதை எப்படியாவது அம்மாவிற்கு தெரியாமல் விட்டிற்குள் கொண்டு வந்து விட வேண்டியது தான் , மணி காலை 6 இருக்கும் , என் நாய் குட்டி வைத்த இடத்தில் இல்லை , எங்கே போய் இருக்கும் , வேகமாக வெளியில் போய் தேடினேன் மலையில் நனைந்து கொண்டே , எங்கும் கிடைக்க வில்லை , எங்கே போனது அது என்னை மறந்து ......!
அங்கெ இங்கே என கால்கள் நில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது , உடலை மழை நனைக்க , கண்களை கண்ணீர் நனைக்க தொலைந்து போன நாயை தேடி 3 மணி நேரம் அலைந்தேன் , இறுதியில் , நண்பர்களிடம் கேட்டேன் , உன் நாயை அங்கெ பார்த்தேன் இங்கே பார்த்தேன் என்றனர் , தேடி அலைந்து ஓய்ந்து போய் விட்டுக்கு வந்திருக்கும் என்று எண்ணி வீடு திரும்பினேன் மழை விடவே இல்லை , தெரு முனையில் எதோ இறந்து கிடப்பது எனக்கு தெரிந்தது , என்னவாக இருக்கும் ? , என் நாய் போல இருந்தது , அருகில் சென்று பார்த்தேன் , என் நாய் தான் , எதோ வாகனத்தில் அடி பட்டு இறந்து விட்டது , மழை நீரில் அது மிதந்து கொண்டு இருந்தது ...,
அதன் பின்பு எந்த வீட்டு செல்ல பிராணியும் நான் வளர்கவே இல்லை ....
20 வது வருடங்களுக்கு பிறகு வீட்டில் நடந்து கொண்டு சாப்பிட்டு கொண்டே இருந்தேன் , மாடி படிக்கட்டில் போய் அமர்ந்து , என் நாய் குட்டி இருந்திருந்தால் இங்கே அதற்க்கு என் சாப்பாடில் பாதியை வைத்திருப்பேன் எங்கே போனது அது ... என்னை விட்டு ... சாப்பிட்ட சாப்பாடில் பாதி சிதறி விழுந்தன படிகட்டின் கீழே உள்ள அறையில்....
பயணம் தொடரும் ....
செவ்வாய், மே 25, 2010
நண்பன்..!
என்று பார்த்திருப்பேன்
உன்னை ...,
அழிந்து போன
என் வாழ்கை புத்தகத்தின்
கல்லூரி பாடத்தில்
அழியாத உனது பக்கம்
மட்டும் இன்னும் அழகாய்..,
எதெற்கெல்லாம் கோபப்படுவாய்
என்னிடம்...,
என் தட்டில் நான் மட்டும்
சாப்பிட்ட பொழுது ,
நம் அன்னையை
உன் அம்மா என்று
சொன்ன பொது ,
நேர்முக தேர்வில் ஒரு முறை
நான் தோற்று நொந்த பொது ,
நான் என் மேல் வைக்கத
நம்பிக்கை நீ வைத்தாய்
சிறு பூச்சி கண்டு நடுங்கிய
வீரன் என்னை
வால் ஏந்தி போர் தொடுக்கும்
துணிச்சல் தந்தாய்..,
உன்னிடம் கேட்க நினைத்த
கேள்விகள் ஆயிரம்
இதற்கு மட்டும் பத்தி சொல்
போதும்
பணம் பதவி பெண் பித்து பிடித்து
அலையும் உலகில்
நீ மட்டும்
எங்கிருந்து வந்தாயட
எதையும் என்னிடம்
எதிர் பார்க்காத
இறைவன் போல ...,
உன் வீட்டு திண்ணை
கல்லூரி மரங்கள்
விளையாட்டு மைதானம்
வெள்ளி கிழமை
பிள்ளையார் கோவில்
அனைத்தும் காத்து கிடக்கின்றன
நமது வருகைக்காய்..,
என் மேல் எனக்கே இல்லாத
அக்கறை உனக்கு
நீ மட்டும் என்னுடன் இறு
அலை அடித்த போதும்
கரை சேர்வேன் வாழ்வில் ..,
நீ என் மேல் கொண்ட
கோபத்திற்கு தமிழில்
வேறு அர்த்தம் தேடினேன்
அக்கறை என்று பதில் கிடைத்தது ...,
உன் முகம் பார்க்காத
நாட்களிலும் சூரியன்
கலையில் வந்து
காட்டுகிறது
உன் முகத்தை ..,
நீ என் ஆட்டோகிராப் நோட்டில்
எழுதிய ஒற்றை வரியை
மீண்டும் மீண்டும்
படிக்கிறேன்
அது
" ஈருடல் ஒருயிராய் இறைவன்
செய்த தவற்றின் விளைவுதான்
நாம் நண்பா...,"
-
சிவராஜன் ராஜகோபால்
உன்னை ...,
அழிந்து போன
என் வாழ்கை புத்தகத்தின்
கல்லூரி பாடத்தில்
அழியாத உனது பக்கம்
மட்டும் இன்னும் அழகாய்..,
எதெற்கெல்லாம் கோபப்படுவாய்
என்னிடம்...,
என் தட்டில் நான் மட்டும்
சாப்பிட்ட பொழுது ,
நம் அன்னையை
உன் அம்மா என்று
சொன்ன பொது ,
நேர்முக தேர்வில் ஒரு முறை
நான் தோற்று நொந்த பொது ,
நான் என் மேல் வைக்கத
நம்பிக்கை நீ வைத்தாய்
சிறு பூச்சி கண்டு நடுங்கிய
வீரன் என்னை
வால் ஏந்தி போர் தொடுக்கும்
துணிச்சல் தந்தாய்..,
உன்னிடம் கேட்க நினைத்த
கேள்விகள் ஆயிரம்
இதற்கு மட்டும் பத்தி சொல்
போதும்
பணம் பதவி பெண் பித்து பிடித்து
அலையும் உலகில்
நீ மட்டும்
எங்கிருந்து வந்தாயட
எதையும் என்னிடம்
எதிர் பார்க்காத
இறைவன் போல ...,
உன் வீட்டு திண்ணை
கல்லூரி மரங்கள்
விளையாட்டு மைதானம்
வெள்ளி கிழமை
பிள்ளையார் கோவில்
அனைத்தும் காத்து கிடக்கின்றன
நமது வருகைக்காய்..,
என் மேல் எனக்கே இல்லாத
அக்கறை உனக்கு
நீ மட்டும் என்னுடன் இறு
அலை அடித்த போதும்
கரை சேர்வேன் வாழ்வில் ..,
நீ என் மேல் கொண்ட
கோபத்திற்கு தமிழில்
வேறு அர்த்தம் தேடினேன்
அக்கறை என்று பதில் கிடைத்தது ...,
உன் முகம் பார்க்காத
நாட்களிலும் சூரியன்
கலையில் வந்து
காட்டுகிறது
உன் முகத்தை ..,
நீ என் ஆட்டோகிராப் நோட்டில்
எழுதிய ஒற்றை வரியை
மீண்டும் மீண்டும்
படிக்கிறேன்
அது
" ஈருடல் ஒருயிராய் இறைவன்
செய்த தவற்றின் விளைவுதான்
நாம் நண்பா...,"
-
சிவராஜன் ராஜகோபால்
திங்கள், மே 10, 2010
எல்லாரும் என்னை மன்னிச்சுருங்க..!
சில சமயங்களில் நாம வாழ்க்கைல பெரிய முட்டஅள் தனமான முடிவுகளை எடுப்போம் , நம்ம நண்பர்கள் சொல்லியும் , பெரியவங்க சொல்லியும் அதை எல்லாம் கேக்காம இந்த மாதிரி முடிவுகளை நாம எடுக்குறோம் , அப்படி நான் சமமீபத்தில் எடுத்த ஒரு முடிவு , எனக்கு பெரிய தலை வலியை கொடுத்தது , எப்பவும் எந்த தவறும் வாழ்கையில் செய்யவே கூடாதுன்னு இருக்குற எனக்கு இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்தது , தெரிந்தே தவறு செய்தது மாதரி ஆகிரடுச்சு ,
எந்த முடிவும் எடுக்கிற முன்னாள் என் நண்பர்களிடம் , என் குடும்பத்தாரிடம் அவர்களின் கருத்தை கேட்ட பிறகே , தீவிரமாக சிந்தித்து முடிவு எடுப்பேன் , என் நண்பர்களிடம் அதை பத்தி கேட்ட பொது ஐயோ நண்பா அதை மட்டும் செய்யதே நமக்கு எதுக்குடா அது எல்லாம் வாழ்க்கைல ரொம்ப ரிஸ்க் எடுக்காதே என்றார்கள் ,
எனக்கு மட்டும் இது பெரிய தவறவே தோணல , என் அலுவலகத்தில் உள்ள மேலாளரிடம் இதை பத்தி சொன்ன பொது , அவர் சொல்லிய பதில் இது , நீ நல்ல இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் தம்பி , அதனால சொல்கிறேன் , அத மட்டும் செய்யவே செய்யத , ரொம்ப வருத்த படுவே என்று ,
அட என்னடா எல்லாரும் இப்படி பயபடுறாங்க , நம்ம அண்ணா ஒருத்தர் இங்கே இருக்காரே அவரிடம் கேக்கலாம்னு அவருக்கு முதல் முறை அழைத்தேன் , அது பற்றி அவரிடம் கேட்ட பொது , அவரோ பண்ண கூடாது அன்று உத்தரவே போட்டு விட்டார் , நான் முடிந்த வரை அவரிடம் எடுத்து கூறியும் எந்த பயனும் இல்லை , இதை பத்தி பேசுவதாக இருந்தால் இனிமேல் என்னக்கு கால் பண்ணாதே என்று இணைப்பை துண்டித்து விட்டார் ,
அப்படி என்ன நாம கொலையா செய்ய போறோம் எல்லாரும் இவ்வளவு பயபடுராங்கலேன்னு , பண்ணிதான் பாத்துருவோம் அப்புடின்கிற முடிவுக்கு வந்தேன் , துணிச்சலோட , எதுக்காகவும் நாம பய பட வேண்டாம்னு முடிவு பண்ணிடு , அதுவும் போன சனிக்கிழமை தான் ,
எல்லாரும் பயந்த அந்த ஒரு செயலை துணிந்து செஞ்சேன் , செஞ்சு முடிச்ச பிறகுதான் தெரிஞ்சது , அவங்க சொன்னது எல்லாம் உண்மை தான் நான் தான் அவசரபட்டு இந்த மாதிரி பண்ணிடேன் , நான் இப்படி பண்ணினதா என் நண்பர்களிடம் சொன்னால் என்னை பார்த்து ஏளனமாய் சிரிப்பார்கள் , பெரிய தப்பு பண்ணிடமேன்னு ரொம்ப வருத்த பட்டேன் , நீங்க இந்த மாதிரி தப்பு பண்ணிராதிங்க தயவு செஞ்சு , என்ன பண்ணினேன்னு உங்களுக்கு சொல்லவே இல்லையே சுறா படத்துக்கு தெரியாம போய் தியேட்டர்ல பஅத்துட்டேங்க ...
குறிப்பு :
இத படிச்சுட்டு நீங்க டென்ஷன் ஆனா அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது...
புதன், மே 05, 2010
காதல் கவிதை...!
கைகுட்டையில் அவள் முகம் பதித்து
சிரித்த பொது சிந்திய முத்துக்களை
அல்லியவது பிழைத்து கொள்ளலாம்
என்று , கோடி கேட்டாலும் கொட்டி
கொடுக்கும் வள்ளல் அவள் ...
சிரிப்பில் மட்டும் ஏனோ
கஞ்சத்தனம் காட்டுகிறாள்
ஒரு மழைகாலத்தில் அவள்
வானம் பார்த்து புன்னகைத்த
மேகமாக பிறந்திருக்க கூடாத
ஒரு நொடியே வாழும்
மலை துளியாக அவள் மேல்
விழுந்திருக்க கூடாத
அவளை தொட்ட புண்ணியத்தில்
கங்கையில் சேர்ந்திருப்பேன்
ஒரு மலை வேளையில்
தயங்கி தயங்கி வந்து
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
என்றபோது உன் காதலை மறைத்து
நீ காடிய பொய் கோபத்தில்
நிறைத்திருந்தது நமது காதல்...!
மார்கழி மாத குளிரில்
அதிகாலை சுப்பிரபாதம்
பாடியே அவள் வரும் வழியில்
பூத்திருக்கும் மலர்களை விட
மலர் அணிதுவந்த
எம்மலர் அழகானது...!
அவள் பிரிவில் வாழும்
ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்
நீரின்றி வாடும் புல்லுக்கும் செடியுக்கும்
உயிர் அளிக்கும் மலையாக மட்டும் அல்ல
சுட்டு எரிக்கும் வெயிலாகவும்
என்னை வாட்டி எடுக்கிறாள்...
நானே பார்த்து எழுதி படித்து நீரின்றி வாடும் புல்லுக்கும் செடியுக்கும்
உயிர் அளிக்கும் மலையாக மட்டும் அல்ல
சுட்டு எரிக்கும் வெயிலாகவும்
என்னை வாட்டி எடுக்கிறாள்...
ரசித்த அவள் எவ்வளவு அழகு
என் கவிதைக்கு மட்டும் அல்ல
எனக்கே அவள் சொந்தக்காரி ஆனா பொது
-
சிவராஜன்
வியாழன், ஏப்ரல் 01, 2010
முதல் காதல் ( முடிவு ).. வாழ்கை ஒரு தொடர் பயணம்..
வியாக்கிழமை எப்போதும் கருப்பு நிற உடைகளை மட்டும் அணிய ஆரம்பித்தால் , நானோ நண்பர்களுடன் cricket விளையாடுவது முழு நேர தொழில் ஆனது , எனக்காக சைக்கிள் நிற்கும் இடத்தில காத்திருக்க ஆரம்பித்தால் , வந்த பிறகும் ஒன்றும் பேசாமலே இருவரும் செல்வோம் , கண்களால் மட்டுமே பேசிக்கொள்ளும் எங்கள் காதல் மொழியில் வார்த்தைகள் மட்டும் ஏனோ நாவிலேயே தற்கொலை செய்து கொள்ளும் , காலையில் நான் லேட்டாக வரும்போது அவள் சைக்கிளை ஓட்டாமல் உருட்ட ஆரம்பித்து விட்டால் , அவளை பார்க்க கூடாது என்று நினைத்தேனே தவிர அவளை பார்க்காமல் இருந்தேனா என்பது ? , அவளை நினைக்க கூடாது என்று நினைத்தேனே தவிர நினைக்காமல் இருந்தேனா என்பது ? , அவளை விட்டு விலகியதில் என் நண்பர்களுக்கு ஏனோ வருத்தம் , என் நண்பர்கள் ரொம்பவும் சொன்னதால் அவளிடம் காதலை சொல்ல ஒத்துக்கொண்டேன் ,அன்னைக்கு அவள் சைக்கிளில் வரவில்லை நடந்து தான் போக வேண்டும் , நான் எழுதிய வார்த்தைகள் இவை கஷ்டப்பட்டு English dictionary grammar book எல்லாம் பார்த்து “ are you love me” இதுதான் அவள் நடந்து பொய் கொண்டு இருந்தால், அந்த பேப்பரை மடக்கி கீழே போட்டேன் அவள் கண் முன்னாடியே , அவள் குனிந்து எடுக்க போகும் பொது … எங்கள் science வாத்தியார் bike kil ஒரு சந்து வழிய வந்துட்டார் , அவள் எடுக்கவே இல்லை , நான் என் காதலை சொல்ல எடுத்த முதல் , கடைசி முயற்சி படு தோல்வியில் போய் முடிந்தது , என் நண்பர்களும் எனக்காக எதுவும் செய்ய தயாராக இருந்தார்கள் , இப்போது என் நண்பர்கள் பாதிபேர் இன்று எங்கு இருக்கிறார்கள் என்றே எனக்கு தெரியாது , ஒருநாள் ஒரு செய்தி வந்தது ஒருத்தன் வேற வகுப்பு , அவளுக்கு love letter கொடுததாதா , பொங்கி எல ஆரம்பித்த , என்னை இல்லை என் நண்பர்களை நானே சமதம் செய்தேன் , இருந்த போதும் அவனை எப்படியாவது எதாவது பண்ண வேணும் என்று தோன்றியது ,
முழு ஆண்டு தேர்வு வந்தது , நானோ எல்லா பள்ளி தேர்வுகளிலும் மதிப்பெண் அதிகமாகி கொண்டே போனது அவளுக்கோ குறைந்து கொண்டே போனது “ நேற்று நான் இருந்த இடத்தில இன்று அவள் ”
எங்கள் பள்ளியில் தேர்வு எழுத முடியாது , அதனால் வெளியூரில் உள்ள பள்ளியில் சென்று தேர்வு எழுத வேண்டும் பேருந்தில் தான் போக வேண்டும் , அரை மணிநேரம் ஆகும் அங்கெ போவதற்கு பசங்களும் பொண்ணுகளும் ஒண்ணாகவே போவோம் (அடே அப்பா, சென்னையில் பொய் பாருப்பா ) , வகுப்புலதான் பொண்ணுகளுக்கு தனி வகுப்பு பசங்களுக்கு தனி வகுப்புன்னு பிரிச்சு வச்சுட்டாங்க , இங்கேயாவது ஒன்ன போக விட்டாங்களே , நமக்கு நம்ம ஆளு மட்டும் வந்த போதும் , எனக்கு முதல் முதலாய் பரு வந்தது , எனக்கு ஒன்றும் சந்தோசம் இல்லை , மிசை முளைக்க ஆரம்பித்தது , நண்பர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள் டே பங்காளி வர வர என்னடா வெல்லையகிட்டே போற (வெல்லையகுதுங்குறது நம்ம அகராதியில பெரிய வார்த்தைங்க கொஞ்சம் லைட் கருப்ப ஆகிட்டு இருந்தேன் ) பேருந்தில் போகும் போதெல்லாம் புத்தகம் பார்த்து படித்ததை விட அவள் முகம் பார்த்து படித்த நேரம் அதிகம் , அவளோ புத்தகத்தை துறப்பதே இல்லை ஒரே கடலை அவளோட தோழியுடன் பார்வை மட்டும் என்மேலேயே இருக்கும் , என்னிடம் பேச நினைப்பதை எல்லாம் தான் தோழியிடம் என் முகம் பார்த்து பேசுவாள், என்னோடு எதாவது பேசுடா என்று நினைதலோ என்னவோ , அவள் என் முகம் பார்த்த நேரத்தை விட என் கண்கள் பார்த்த நேரமே அதிகம் , அவள் விழி தரும் வலியை உணர்ந்தேன் , அவள் பார்வை திருடர்கள் என் கண் வழியே என் இதயம் புகுந்து இதயத்தை திருடி அவளிடம் கொடுக்க அவளோ திருப்பி உன்னிடம் தரவே மட்டன் என்பதைப்போல கண்களை முடிக்கொள்வாள் , இருண்ட என் வானில் ஒரு முழு வட்ட நிலா வந்து அது எப்போதும் என்னை பார்த்து புன்னகைத்து கொண்டே இருப்பதை போல் இருந்தது , தேர்வு நாட்களும் ஓட ஆரம்பித்தது , கடைசி தேர்வும் வந்தது ,
என் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் கடைசிநாள் ஒன்று , சைக்கிள் எனது நண்பன் , நான் செல்லும் போதே அவளும் வந்தால் , இன்றைக்காவது பேசிவிட வேண்டும் என்று மனசு தவிக்க ஆரம்பித்தது , யாராவது அவளுடன் பேசுவதை பார்த்து அவளுக்கு பிரச்னை வரவேண்டாம் என்று விட்டு விட்டேன் , இருவரும் சைக்கிளை ஓட்டவே இல்லை உருட்டிய படியே பள்ளிக்கு சென்றோம் , அந்த வழியில் உள்ள மரங்களும் பறவைகளும் கூட எங்கள் இருவரின் வருகைக்காக இன்றும் காத்திருக்கும் , இன்றைக்கு கடைசி நாள் , என் வானில் இருந்த நிலா விளக்கிப்போகும் , என்னை பார்த்து புன்னகைத்து வந்த புள்ளிமான் ஓடிப்போகும் , என் வீடில் சின்னதாய் சத்தமிட்டு கொண்டு இருந்த சிட்டுக்குருவியும் வேறு வீட்டுக்கு மாறிப்போகும் , என் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக இருள்வதை உணர்ந்தேன் , என்னை விட அவளையே அது கலங்க வைக்கும் என்று தோணிற்று , என் நண்பர்கள் முகத்தில் சந்தோசம் கலந்த கவலை , தேர்வு எழுத போகும் போதும் அவள் முகம் பார்த்தே நேரம் போனது , இன்று மட்டும் அவளின் முகம் பாத்திருந்தால் , மேகம் எல்லாம் ஒன்று கூடி கண்ணீர் விட்டு மலையாய் தன்னையே மாய்த்து கொண்டு இருக்கும் , 10 வது கடைசி நாள் , கடைசி தேர்வு முடிந்தது , என் வாழ்வில் பூத்த முதல் காதலும் முடிவை நோக்கி போய்கொண்டு இருந்தது , தேர்வு முடிந்து நான் வெளியே வந்த உடன் அவள் அவளின் தோழியிடம் பேச ஆரம்பித்தால் " சொல்ல முடியாது அடுத்த வருஷம் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாலும் வச்சுருவாங்க , அனா நீ ஒன்னும் கவலை படாத டீ எங்க அப்பாகிட்ட எப்புடியாவது பேசி நான் 11 வது படிக்க வந்திறேன் , அனா அது கொஞ்சம் கஷ்டம் தான் என்னை படிக்கவைக்கமட்டங்கனு நினைக்கிறேன்" , அவள் என்னிடம் ஜாடையாக பேசிய வார்த்தைகள் இவை , அவள் மனம் தொட்டு தோன்றிய காதல் அவள் முகம் பார்த்தே முடிந்தது , அவள் நான் வருவேன் என்று சைக்கில் வைக்கும் இடத்தில் காத்திருந்தாள் , நான் அங்கு சென்றதும் லேசான ஒரு புன்னகை , என்னை விட்டு பிரிந்து போக ஆரம்பித்தால் , ஏப்ரல் மதியம் சரியான வெயில் , அவளுக்கு பின்னையே பயணிக்க ஆரம்பித்தேன் , வாழ்வில் ஒரு பெண்ணின் பின்னல் போன முதலும் முடிவுமான அந்த அத்யாயம் முடிவை நோக்கி , எங்களை பிரிக்கும் அந்த பாதை வந்தது,, என்னை திரும்பி பார்த்து கொண்டே போக ஆரம்பித்தால் , அவள் போகும் வரை பார்க்க ஆரம்பித்தேன், யாருக்கு தெரியும் இங்கு கத்தியே இல்லாமல் ஒட்டிய இரண்டு இதயத்தை துடிக்க துடிக்க வெட்டி எடுக்கிறது காலம் என்று .
இனிமேல் அவளை எப்போது பார்பேன் .............
10 வது தேர்வு முடிவு பார்க்க அவள் வரவே இல்லை
11 வது அவள் எந்த பள்ளியிலும் சேரவே இல்லை
12 வது படிக்கும் பொது அவளுக்கு திருமணம் நடந்தது மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் , உன்னை விட ரொம்ப கறுப்பாம் டா பங்காளி இது என் நண்பன் சொன்னது....
நான் கல்லூரியில் சேர்ந்து சிறிது நாள்களில் எங்கள் ஊருக்கு வந்தேன் , மீண்டும் கல்லூரி சொவதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தேன் பேருந்தில் சரியான கூட்டம் , எனக்கு பின்னல் ஒரு பெண் என்னங்க ஒரு ticket ( வாங்கித்தாங்கன்னு முடிக்காமலேயே ) என்று சொல்லும் பொது திரும்பிவிட்டேன் அப்படியே நிறுத்தி விட்டாள் கையில் இருந்த காசையும் கசக்கி விட்டாள் , அவளை மீண்டும் பார்த்தேன் , அவள் குடி இருந்த என் இதயத்தை காலம் வெடி வைத்து உடைத்ததை போல் இருந்தது , மூளைக்கு தெரியும் அவளை பார்க்ககூடாது அவள் இன்னொருவனின் மனைவி என்று அனல் மனசுக்கு ? , அவளிடம் இதுவரை நான் ஒரு வார்த்தை கூட பேசியதே இல்லை , அவள் என்னிடம் பேசிய ஒரு வந்தாய் என்னங்க ஒரு ticket அவ்வளவு தான் , பக்கத்தில் இருந்த யாரோ அவளிடம் அவளை பத்தியும் அவளின் கணவனை பத்தியும் விசாரிக்க ஆரம்பித்தார்கள் , அவளும் என்னை பார்த்துக்கொண்டே பதில் சொல்ல ஆரம்பித்தால் ,வராத புன்னகையை இழுத்துக்கொண்டு , நான் நல்ல இருக்கேன் பாட்டி , ஓஓஓ அவர அவரு ரொம்ப நல்லவரு பாட்டி , என்னை ரொம்ப நல்ல பதுகிறாரு , நீ ஒன்னும் கவலை படாதே பாட்டி , நான் ரொம்ப நல்ல சந்தோசமா இருக்கேன் , அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது , ஒன்றுமே கேக்காத அந்த பாட்டியிடம் பேச ஆரம்பித்தால் , எதுக்கும் கவலைபடாத பாட்டி , நீ நல்ல இருக்கணும் எப்பவும் கடவுள் கிட்ட வேண்டிக்கொண்டே இருப்பேன் , நல்ல சாப்பிடு பாட்டி , உடம்ப நல்ல பத்துக்கோ பாட்டி , நீயும் சந்தோசமா எத பத்தியும் கவலை படமா நல்ல இரு பாட்டி நான் வர்றேன் , பேருந்தில் இருந்து இரங்கி அதே புன்னையுடன் அதே பார்வையுடன் என்னை பார்த்தல் , அவளின் பார்வையும் புன்னகையும் "எல்லாம் நன்மைக்கே எதற்கும் கலங்காதே என்று சொல்வதை போல் இருந்தது", நான் இறங்க வேண்டிய இடம் இது இல்லை என்பதால் தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன் ......
பயணம் தொடரும்....
புதன், மார்ச் 31, 2010
முதல் காதல் ( பாகம் 3 ).. வாழ்கை ஒரு தொடர் பயணம்..
காதலே உலகம் என்றாகிப்போன வாழ்வில் , அவளை ஒரு முறை பார்க்க மணிக்கணக்கில் காத்திருந்திருப்பேன் , அவளும் ஒருநாள் தெரிந்து கொண்டால் தான் தோழியின் மூலமாக நான் அவளை காதலிப்பதை , உலகில் கரையாத கல் ஒன்று உண்டு அது பெண்ணின் மனம் , அவள் அதற்கு சிறந்த உதாரணம் , அவளின் தோழியின் முலமாக அவளுக்கு தெரிய வைத்ததே என் நண்பர்களும் நானும் தான் , பதில் ஒன்னும் இல்லை , என் உலகம் அவளான பொது என் நண்பர்களை பிரிந்து செல்வதை உணர்ந்தேன் , என் மேல் அவளுக்கு நல்ல எண்ணம் எதுவும் இல்லை என்பதை உணர தொடங்கினேன் , 10 வது தேர்வு நெருங்கியது , எல்லா பாடத்திலும் மதிப்பெண் குறைந்து விட்டது , ஒழுங்க படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் எடுக்க முடியும்,
அவளை மறக்கவேண்டும் என்று ஒரு மனசு சொன்னது , அது முடியாதது என்று எனக்கே நன்றாக தெரியும் , திடிரென ஒருநாள் கருப்பு பாவாடை தாவணியில் வந்தால் , பூ வைக்கவே இல்லை , கருப்பு கலர் ரிப்பன் , சுடிதாரில் தான் எப்போதும் வருவாள் , அன்னைக்கு மட்டும் வேறு விதமாக , எங்கள் வகுப்பில் போட்டி அதிமமாக ஆரம்பித்தது படிப்பில் யார் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள் என்று , வாழ்க்கைல வெற்றி பெறனும்ன அவளை மறந்தே திறனும் என்பது முடிவு , மூளை எடுத்த இந்த முடிவை மனம் மட்டும் ஏற்றுகொள்ள மறுத்தது , அவள் என்னை பார்க்க ஆரம்பித்தால் , அவள் என்னை பார்க்கும் போதெல்லாம் தலையெய் கீழே குனிய ஆரம்பித்தேன் , அடிக்கடி என்னை அனைவரிடமும் கேட்க ஆரம்பித்தால் , எவன் இல்ல இல்ல மன்னிக்கவும் அவங்க எங்க பாக்கவே முடியல , நல்ல இருக்கங்களா என்று , நானோ அவளை இனிமேல் பாக்கவே கூடாது , நாம ஆசைபட்ட எல்லாமே நமக்கு கிடைக்கும் ரொம்ப லெட்ட கூட இருக்கலாம் , அனா நம்ம ஆசைபட்ட பொருள் நமக்கு கிடைக்கும் பொது அதை எதுகிற மன நிலைல நாம இருக்க மாட்டோம் , குழந்தைகள பாருங்க அம்மான அதுங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க அம்மா வருகிற வரைக்கும் ஒரு பொம்மைய குடுத்துட்டு அவங்க அம்மா வந்த பிறகும் அது அம்மாவிடம் போகாது பெருசா பக்கத்து அது பொம்மையுட விளையாடிகிட்டு இருக்கும் , அது மாதிரிதான் நாமலும் காதல் , நட்பு , படிப்பு , வேலை , இதெல்லாம் முக்கியமா தெரிஞ்ச போதும் சரியான நேரத்துல அதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுதமான கண்டிப்பா யாருமே குடுக்குறது இல்லைனுதான் சொல்லுவேன் , அப்படிதான் நானும் அவள் பார்க்காத வரை அவளையே சுத்தினேன் , நான் விலகிய பிறகு பார்க்க ஆரம்பித்தால் , அவள் பார்க்க ஆரம்பித்த பிறகும் , பார்க்கவே இல்லை . உலகில் செய்யவே கூடாத ஒன்று நம்பிக்கை துரோகம் , அவளை காதலித்தாலும் ஆவலுடன் சேர முடியாது , என் வீட்டில் என் மீது உள்ள நம்பிக்கை இது இரண்டும் சரியாக இருக்கவேண்டும் என்றால் அவளின் பக்கமே போக கூடாது , நானோ விலகி விலகி போக அவளோ என்னை நெருங்க ஆரம்பித்தால் காதலுடன்...
பயணம் தொடரும்....
செவ்வாய், மார்ச் 30, 2010
முதல் காதல் ( பாகம் 2 ).. வாழ்கை ஒரு தொடர் பயணம்..
அவளின் மீதான காதல் கூடிக்கொண்டே செல்ல , எங்க வீட்டில் வைக்கும் fair &Lovely அதிகமாக காலியாக ஆரம்பித்தது , சில முறை இப்படி நடந்து இருக்கிறது , என் அம்மா என்னிடம் கேட்ட கேள்வி இது ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே பெரிய பாக்கெட் fair &Lovelyவாங்கிட்டு வந்தேன் அதுக்குள்ளே காலி பண்ணிடியா என் மனசுக்குள் நான் பேசிக்கொள்வேன் " உங்களை யாரு என்னை கருப்ப பெத்துக சொன்னது " ஒரு நாளைக்கு ஒரு முறை போட்ட பரவா இல்லை , ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை போட்ட இப்படித்தான் ஆகும் , அதே சமயம் என் அப்பாவின் குரல் வரும் எங்க இங்கே நான் சேவிங் பண்ண வச்சுருந்த ப்ளைட ஒன்னையும் காணோம் , அதுவும் அடியேனே , மிசை வளரனுமா இல்லையா , செய்யிற தொழில்ல ஒரு பக்தி இருக்கனுமா இல்லையா , சேவிங் மெசின் இல்லாம வெறும் ப்ளைட மட்டும் வச்சு இல்லாத மிசைய சேவிங் பண்ணி கொண்டு இருந்தேன் , இது எப்புடியோ எங்க அப்பா பாத்துட்டு ஒரு நாள் என்கிட்ட வந்து எதோ கிப்ட் மாதிரி தந்தாங்க அத நான் தொறந்து பார்த்தேன் , நான் அப்புடியே சாக் ஆகிட்டேன் , உள்ள சேவிங் மெசின் இருந்தது , உனக்கு வேண்டும் என்றால் தனிய வச்சுக்கோ என்னோட ப்ளைட காலி பண்ணாதப்பா அப்புடின்னு சொல்லிடு போய்டாங்க , வீட்ல அசிங்கம் மேல அசிங்கம் பட்டுகிட்டே இருந்தாலும் அவளின் நினைவு மட்டும் என்னை வேறு ஒரு உலகத்துக்கு கொண்டு பொய் விடும் , அவளும் நானும் மட்டும் வாழும் அந்த அதிசய உலகம் .
கலையில் ஆசை ஆசையாய் எல ஆரம்பித்தேன் , அவளை பள்ளியில் பாப்போம் என்ற சந்தோசம் மனசு முழுவதும் , அதே 8 :30 மணிக்கு அவ வருவாள் என்று காத்துகொண்டு இருப்பேன் , அன்னைக்கு 9 : 00 ஆகிருச்சு அவ வரவே இல்ல , ஒன்பது மணிக்கு பள்ளி ஆரம்பம் ஆகி விடும் , சரி பள்ளிக்கு பள்ளிக்கு போகம வீட்டுக்கு திரும்பலாம்னு நினைச்ச வீட்டுக்கு பொய் அந்த பக்கிய " ஏன் பள்ளிக்கூடம் போகல , உனக்கு என்ன ஆச்சு ?" அப்புடி இப்புடின்னு கேள்வி கேட்டே என்ன கொன்னுருங்க , லெட்ட அனாலும் பரவ இல்ல பள்ளிக்கே போகலாம்னு போனேன் prayer போய்கிட்டு இருந்தது , ஏன் வகுப்புக்கு பின்னல் ஒரு சுவர் இருக்கிறது நாங்க லெட்ட வந்த அதுல ஏறி குதுச்சு வகுப்புக்கு போவோம் , அப்போது ஏன் நண்பன் சொல்லித்தான் தெரியும் அவளின் அப்பா வெளிநாடில் இருந்து வந்ததால் அவள் பள்ளிக்கே வரவில்லைன்னு , இன்னைக்கு பொழுது போகாதே என நொந்து கிட்டு , நாளை எப்போது வரும் என காத்திருந்தேன் , என் நண்பனிடம் அவளை பற்றியும் அவளின் குடும்பம் பற்றியும் கேக்க சொல்லி இருந்தேன் , அவனும் சொன்னான் விசாரித்து , அந்த பொண்ணு ரொம்ப வசதியாம்ட , முதல் பந்திலேயே அட்டம் இழந்து விட்டேன் , அவளுக்கு கருப்புன சுத்தமாவே பிடிக்காதாம் " சூப்பர்" , பிடித்த ஹீரோ விஜய் , அட நம்ம ஆளு , மாவட்டத்துல 10 ல முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதே அவளின் இப்போதைய கொள்கையும் , " 10 ல பாசவது அகனும்கிறது நம்மளோட கொள்கை , அவங்க வீட்ல பணக்கார மாப்பிளைக்கு தான் பொண்ணு கொடுப்பாங்களாம் "சரி..."
இவையெல்லாம் அவளின் மீதான காதலில் நான் வாய்த்த தன்னம்பிக்கையை அசைக்க ஆரம்பித்தது ,
அடுத்தநாள் அவளை பார்த்தேன் எப்படியும் இவ நமக்கு கிடைக்க மாட்டாள் என்ற விரக்தியுடன் , அவள் மட்டும் எதையும் கண்டு கொள்ளாமல் சின்ன சின்ன பூவுக்கெல்லாம் சிறகு முளைத்து பறப்பது போல் பறந்து கொண்டு இருந்தால் சைக்கிளில் , ஒரு முறை என்னை திரும்பி பார்க்க மாட்டாளா , ஒரு வார்த்தை பேச மாட்டாளா என்று ஏங்கிய நாட்கள் அதிகம் , இதற்கிடையே காலாண்டு தேர்வு வந்து விட்டது , தேர்வு விடுமுறையில் அவளை பார்க்க முடியாது என்ற கவலை வேறு , மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது , அவளை பார்க்க போகிறோம் என்ற சந்தோசம் மனசு முழுவதும் , ஒருநாள் அவளை நினைத்து கொண்டே என் பேனா பேபரில் கிறுக்கிய வரிகள் இவை ,
"இமைகள் எனும் கேமராவால் படம் பிடித்து
கண்கள் எனும் காந்தத்தால் என்னை கவர்ந்து இழுத்து
பாசம் எனும் படைவீறாக்கள் கொண்டு என்னை சிறை பிடித்து
இதயம் எனும் இருட்டறையில் அடைத்தவளே "
எழுதி முடித்து விட்டு பார்த்த பொது ஒரு கவிதை மாதிரி இருந்தது , என் வாழ்வில் நான் எழுதிய முதல் கவிதை இது ,
பள்ளி முடிந்து சைக்கில் எடுத்து கொண்டு வெளியே வந்தேன் , அவளை மிக அருகில் பார்த்தேன் ரெம்ப அழகா இருந்த கன்னத்தில் சின்னதா அழகா ரெண்டு பரு இருந்தது , பரு வந்த எல்லாருக்கும் அசிங்கம இருக்கும் அனா அவளுக்கு மட்டும் அழகா இருந்தது , வீட்டுக்கு சித்திட சொன்னேன் ஒரு பொண்ண எனக்கு பிடித்து இருக்கு , என்ன அந்த பொண்ணு உங்களை மாதிரி இருக்குனு "அள்ளி விட்டேன் " அவங்களும் அப்படியப்பா , ரெண்டு பாரு இருக்கு அவளுக்கு எவளவு அழகா இருக்கு தெரியுமா , அவங்க சொன்னது அந்த பொண்ண யாரோ நல்ல பக்குரங்கனு அர்த்தம் அப்புடின நம்ம பாசைல (சைட் அடிக்கிறது ) அர்த்தம் , அது நான் தான் எனக்கு நல்ல தெரியும் , என் எனக்கு பரு வரலை , உன்னை யாரும் பாக்கள , அப்படிய , சாமி கிட்ட வேண்டிகிட்டேன் சாமி சாமி வேகமா எனக்கும் பரு வரணும் பரு வந்த அவ என்னை பாக்குறத அர்த்தம் .... பரு வரவே இல்ல ...
அன்று நல்ல மலை எல்லோரும் கலையில் பள்ளிக்கு போய்கொண்டு இருந்தாங்க , நானும் போனேன் , மலை என்பதால் பள்ளியில் விடுமுறைன்னு சொல்லிடாங்க , எனக்கு முன்னாடியே பள்ளிக்கு போன என்னடா நாண்பர்கள் எல்லாம் பள்ளி விடுமுறை டா பள்ளிக்கு போகாதே னு சொன்னாக நான் அப்புடி இருந்தும் பள்ளிக்கு போனேன் கொட்டுற மலையில் , இன்னைக்கு விடுமுறை என்பதால் அவளை பார்க்க முடியாது ஒரு முறையாவது அவளை பார்க்க வேண்டும் என்று சைக்கிளில் வேகமாக சென்றேன் ....
பயணம் தொடரும் ...
திங்கள், மார்ச் 29, 2010
முதல் காதல்.. வாழ்கை ஒரு தொடர் பயணம் ...!
காதல் ஒரு அழகான உணர்வு , எல்லோருக்குள்ளும் காதல் இருக்கும் இருக்கணும் அப்புடி இல்லாம நான் யாரையும் காதல் பண்ணலைன்னு சொன்ன அவங்களா நல்ல மருத்துவரை பொய் பார்க்கலாம் ,
ரொம்ப சந்தோசமா போய்கிட்டு இருந்த என்னோட வாழ்க்கைல ஒரு பொண்ணு வந்தால் , நான் கல்லூரி படிக்கும் பொது இல்ல , 10 வது படிக்கும் பொது , 8 வது வரை படித்து விடுதியில் தங்கி , எனக்கு அது பிடிக்காமல் போகவே , என் ஊருக்கு பக்கத்து ஊரில் உள்ள ஒரு பள்ளிக்கு படிக்க வந்தேன் , 9 ஆம் வகுப்பில் சேர்ந்த பொது அந்த வகுப்பில் உள்ள பாதிப்பேர் என் ஊரை சேர்ந்த என் நண்பர்கள் , அவளை சில முறை பார்த்த போதும் ஒன்றும் தோன்றியது இல்லை , எங்கள் பள்ளிக்கூடம் 9 மணிக்கு நான் பள்ளிக்குள் 8:30 மணிக்கு வருவேன் , அதே சமயம் அந்த பொண்ணும் வருவாள் இது எதார்த்தமானது என்றே நான் நினைக்கிறேன் , தொடர்ந்து நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் வருவதால் நண்பர்கள் என்னை கிண்டல் பண்ண ஆரம்பித்தார்கள் , எங்களுக்குன்னு ஒரு group இருந்தது அதில் எல்லாரும் love பண்ணி கொண்டு இருந்தாங்க , நான் மட்டும் பண்ணாம இருந்தேன் , ஒரு தொகுதி பங்கீடு மாதிரி அது உன் ஆளு இது என் ஆளுன்னு ஒவ்வொரு பொண்ணையும் இவங்களே அவங்க அவங்க அளக்கிகுவாங்க இதுல என்ன முக்கிய அம்சம்ன அந்த பொண்ணுகளுக்கு இந்த மேட்டர் தெரியாது ,
அப்படி பொய் கிட்டு இருக்கும் பொது திடிர்னு அவளோட யாபகம் முதல் முதல் ல எனக்குள் வந்தது என் அந்த பொண்ண நினைக்கிறோம் அப்பறம் என்னோட நண்பர்கள் ரொம்ப கிண்டல் பண்ணுவாங்கனு தோனுச்சு , இரவு 12 மணி ஆகிருச்சு TV பக்க ஆரம்பித்தேன் அவளின் யாபகம் தொடர்ந்தது , பொய் தூங்கிட்டேன் கனவிலும் வந்தால் , தூக்கமும் போச்சு , எழுந்து நடக்க ஆரம்பித்தேன் , தூங்கு ப காலைல பள்ளிக்கூடம் போகணும் ல அம்மாவின் குரல் , அவளின் நினைவு என் நிழலை போல் தொடர்ந்தது , மீண்டும் வந்து துங்கினேன் இல்லை தூங்க முயற்சி செய்தேன் அப்போது என்னோல் அவள் மேல் ஏற்பட்ட chemistry ஒரு மாதிரியான வலி இதயத்தில் மனசெல்லாம் அவ இருந்தால் ஒரு மாதிரி மனசு வலித்த போதும் அந்த சுகம் எனக்கு பிடித்தது , என் துக்கத்தை கேடுதவள் , கலையில் எழுந்தேன் எனக்குள் கேட்ட முதல் கேள்வி இதற்கு பெயர் என்ன என்னால் சொல்ல முடியாத ஒரு உணர்வு ஒரு பொண்ணின் மேல் , ஒரு வேலை காதலா ?
பள்ளிக்கு பொய் கடைசி பெஞ்ச் ( கல்லூரி முடிக்கும் வரை நான் கடைசி பெஞ்ச் தான் புரியலையா மாப்ள பெஞ்ச் ) ல இருந்த நண்பனுடன் இரவில் நடந்ததை சொன்னேன் , உடனே அவன் “ டே பங்காளி கைய குடுடா confirm ட இது காதல் தான் ” எனக்கு கொஞ்சம் பயம் கலந்த சந்தோசம்
எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவள் உள்ளே வர ஆரம்பித்தால் , 10 வது தான் அங்க l ஏரியா வில் அனைவரும் படிக்கும் கடைசி வகுப்பு , என் தலைஎழுத்து 10 வதோடு முடிந்து விடுமோ என்று நினைத்தேன் , என்ன எங்க ஏரியா ல காலேஜ் சே இல்ல , காதலர் தினம் படத்தில் வரும் இந்த டயலாக் எனக்கு ரொம்ப பிடிக்கும் “ ஏழை நாய் எல்லாம் எதுக்குடா படிப்பு ” , ஒரு கிராமத்தில் பிறந்தது எங்களோட தப்பா , என்னுடன் படித்த என் நண்பர்கள் யாருமே கல்லூரி வரை வரவே இல்லை என்னை தவிர என்பது வேறு கொடுமை , நல்ல படிச்சா பசங்கள கூட படிக்க வைக்க மட்டங்க , அனா பணம் மட்டும் நெறைய இருக்கும் , நல்ல படிச்சு பெரிய ஆளா அக வேணும் கிறது எனக்குள் இருக்கும் வெறி , அப்புடி ஆவேனகிறது ?
பள்ளி முடிந்து வெளியே வந்தேன் , அவளை பார்த்தேன் , முதல் முதலாக ஒரு பெண்ணை பார்த்தேன் அங்குலம் அங்குலமாக , ரொம்ப அழகா இருந்த , ஒரே நேரத்துல வனத்தில் ஆயிரம் நிலா வந்த எப்புடி இருக்கும் அப்புடி , புள்ளி மனுக்கு பெக் மட்டி பள்ளிக்கூடம் போக சொன்ன எப்புடி இருக்கும் அப்புடி இருந்த , என் மனசு மட்டும் என்கிட்ட இல்லவே இல்லன்னு தோனுச்சு , பள்ளிகூடத்த விட்டு போகவும் மனசே இல்லை , அவளோட lady bird cycle என்னோடது herculase , அவ cycle முன்னாடி கூடை மதி ஒன்னு இருக்கும் அதுலதான் அவளோட பெக் க வைப்ப , அவளோட close friend ஒருத்தி , ரெண்டு பெரும் ஒன்னாவே தான் இருபங்க , நாங்க அவங்களுக்கு வச்ச பேரு ரெட்ட கிளி (காதலிக்கிறதுக்கு முன்னாடி )
அவள் மட்டும் இல்ல அவளோட cycle , பெக் எல்லாம் கூட எனக்கு அழகா தெரிஞ்சது , அன்னைக்கு எல்லாமே எனக்கு புதுசா இருந்தது , எனக்கு cycle ஓட்ட ரொம்ப புடிக்கும் அதுவும் வேகமா பள்ளிகுடதுல இருந்து 10 mins ல வீட்டுக்கு போயிருவேன் , எங்க ஊருக்கும் அவளின் ஊருக்கும் ஒரே road தான் போகும் ஒரு வளைவு வந்து ரெண்டு ரோட பிரியும் அங்க நாங்க பிரிவோம் , நாளை சந்திப்பொம் என்ற நம்பிக்கையில் , அவள் மேல் என் இதயத்தில் எழுதப்பட்ட காதல் , எதோ வானில் பறந்தது போல் யாபகம் , வீட்டுக்கு போகும் பொது திடிரென தோன்றியது , அவள் என்னை காதலிப்பாள , அவ ரொம்ப சிகப்பு நானோ ரொம்ப கருப்பு , அவளுக்கு சுண்டி விடணும்னு நெனச்சாலே ரேதம் வந்துரும் எனக்கோ கத்தியவச்சு கிரினாலும் ரெத்தம் வராது , சிகப்பகனும் என்ன பண்ணலாம் idea fair & lovely, அப்பறம் முஞ்சில மிசையே இல்லை மிசை இருந்தாதான் பொண்ணுகளுக்கும் பிடிக்குமாம் ok , அப்பறம் நல்ல படிக்கிறவங்கள புடிக்குமாம் , ok, அழகா இருக்கிற பசங்கள புடிக்குமாம் அனா இது கொஞ்சம் இல்லை நெறைய கஷ்டம் எப்புடி அழகா ஆகுறது , அம்மா விடம் கேட்ட கேள்வி இது நான் எம்மா கருப்ப பிறந்தேன் , என்ப நீ அழகா தானே இருக்கே , அனா கருப்ப இருக்கனே உங்க கலர் ல என்னை பெக்கம எம்மா அப்பா கலர் ல பேத்திங்க , போடா எனக்கு வேலை இருக்கு இதுக்கெல்லாம் நம்ம சித்திதான் சரியான ஆளு என்ன கேட்டலும் பதில் சொல்லும் பக்கி , வேகமா சித்திட பொய் சித்தி என்னை பசங்க எல்லாம் என்னை கருப்ப இருக்கமுனு கிண்டல் பண்டரங்க அப்புடின்னு ஒரு பிட்ட போட்டேன் , யாரு சொன்னானு கேட்டாங்க , அத விடுங்க நான் ஏன் கருப்ப பிறந்தேன்னு கேட்டேன் , ஆம்பளைக்கு அதுதாப்ப அழகு , பொன்னுகுதான் கலர் தேவை உனக்கு தேவை இல்லை , அவங்க என்ன சொன்ன போதும் மனசு ஏத்துக்கவே இல்ல நான் அழகா அகனும் அதுக்கு என்ன வழி , வழி சொன்னங்க கடலை மாவு , night துங்கும் பொது போட்டுடு தூங்கு ,"சூப்பர்" அப்பறம் fair & lovely போடு , அப்பறம் lux soap போடு , ok done , “சிங்க மொன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் பொறந்துருச்சு ”
கடலை மாவு , சந்தானம் , fair & lovely எல்லாத்தையும் மூஞ்சியில் பூச ஆரம்பித்தேன் , அவள் மேலான காதலும் நான் கருப்பு என்ற தாழ்வு மனப்பான்மையும் என்னுள் பெருகிக்கொண்டே போனது ….
பயணம் தொடரும்....
சனி, மார்ச் 27, 2010
எப்புடி எல்லாம் வாழ்த்து சொல்லுறாங்கப்பா...!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

தம்பி நீ ஒரு வரலாறு
நீ வரலாறுல மார்க்
எடுக்கததால மதிப்பு இல்ல
உனக்கு கிடைக்காத மார்க்குக்கு
இதபதி நாளைய வரலாறு சொல்லும்
உன் அழகை அழகாய் காட்டாத
கண்ணாடி கண்ணாடியே இல்லை
இருந்த தானே காட்ட முடியும்னு
சத்தியமா நான் இல்ல
கண்ணாடி ஏகதாளம் பேசலாம்
நீ கண் கலங்காதே
கண்ணாடியை ஒடசுறலாம்
பைக்குக்கு இருக்க மதிப்பே
போச்சு இந்த உலகத்துள்ள
யாரும் வங்க மெட்ராங்கன்னு இல்ல
உனக்கு பைக் ஓட்ட இல்ல
உருட்ட கூட தெரியதுன்குரதால
நாளைய பர்முல 1 பைக் ரேஸ்
இரவு இரவில் வர பயந்திருக்கும்
சூரியனை பார்த்து இல்லை
இரவில் தனியாக சொல்லாத
மாவீரன் நீ வெளியே
அம்மாவை துணைக்கு கூட்டி வருவதால்
தமிழனின் வீரம் உன்னை பத்தி
நாளைக்கு எழுதட்டும்
கம்ப்யூட்டர் ல புலி நீ
சாம்பார்ல கரைக்கிற புளி இல்ல
கம்ப்யூட்டர் ரையே கரைசு குடிச்ச புலி நீ
C program ல prime no program
எழுத முடியாம நீ முளிச்சதால
Turbo C யே டர் ஆகிருச்சு
இதபத்தி C# .net 2010 ல
Detail ல வரட்டும்
என் தம்பியாய், தோழனாய் , என் வாழ்வில் கலந்து விட்ட என் அன்பு தம்பி , வாழ்நாள் முழுவதும் சந்தோசமாகவும் , அனைத்திலும் போராடி வென்று ஒரு சதனையலனாக வாழ வாழ்த்துக்கள் , நீங்களும் வாழ்த்துங்கள் …
புதன், மார்ச் 24, 2010
பயணம்...!
எதையோ வேண்டி (பணமோ, பதவியோ, படிப்போ) தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்வில் முட்களையும் புதர்களையும் தண்டி நம் பதங்கள் பயணிக்கும் வேளையில் சில நல்ல இதயங்களும் நம்முடனே பயணிக்கும் காலத்தின் கோலமாய் நம் நல்ல மனிதர்களை பிரிய நேர்த போதும் நாம் மனம் மட்டும் ஒருபோதும் அவர்களை மறப்பது இல்லை...
அப்படி என் சிறு வயதில் என் இதயத்தில் வாழ்த்த என் தோழி பற்றிய பதிவு இது...
என் வீட்டுக்கு பக்கத்து வீடு அவளுடையது , அழகும் அன்பும் நிறைந்த என் தோழி , அவளவு நன்றாக படிக்க மாட்டாள் , அது தேவையற்றதும் கூட , நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் பக்கத்தில் இருப்போம் , என்னிடம் காசு இல்லாத நேரத்தில் அவளிடம் இருந்து காசு வாங்கிய இல்லை இல்லை அப்பியது போல் யாபகம் , பள்ளி முடிந்து இருவரும் ஒன்றாகவே வீட்டிற்கு செல்வோம் , மழைக்காலங்களில் ஆட்டு மந்தைகளை காட்டி அது என்ன என்று கேட்பாள் நானோ அவை சிங்கம் என்பேன் கரப்பான் பூச்சியை பார்த்தாலே ஓடி வந்து என்னை காட்டி கொண்டு கண்களை மோடிக்கொள்வாள் சிங்கம் என்றால் சொல்லவே வேண்டாம் , என் கைகளை பிடித்து " என்னை எப்படியாவது இந்த சிங்கங்களிடம் இருந்து காப்பாற்று நானும் ஒரு ஹீரோ போல கவலை படாதே உன்னை பத்திரமாக அழைத்து செல்கிறேன் என்பேன்" துரத்தில் வரும் ஆட்டுக்கும் சிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பதா இல்லை நான் சொன்னதால் ஆடும் சிங்கமானதா என்று எனக்கு தெரிய வில்லை, அப்படி என் சிறு வயதில் என் இதயத்தில் வாழ்த்த என் தோழி பற்றிய பதிவு இது...
நான் ஆண் அவள் பெண் என்ற வேறுபாடின்றி ஓடிய வாழ்கை எங்களுக்கு நாளுக்கு நாள் வயது என்ற ஒன்றையும் தந்தது , சில முறை அவள் கேட்கும் கேள்வி இது "என்னை உனக்கு பிடிக்குமா நான் ஆம் என்பேன் உங்கள் அம்மாவை விட என்னை பிடிக்குமா இருவரையும் பிடிக்கும் என்பேன் உடனே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் அம்மாவை விட என்பாள்" அவளது சிரிப்பு சத்தம் என் காதுகளில் இன்னமும் கேட்டு கொண்டே இருக்கிறது , நான் படிப்பதற்காக வெளியூர் சென்று விட்டேன்
அதன் பிறகு எப்போதாவது சந்திப்பேன் , சில வார்த்தைகளுடன் நிருதிக்கொள்வாள், சில நாட்களில் அவள் திருமண மாகி கணவனுடன் சென்று விட்டாள், அதன் பிறகு பார்க்கவே இல்லை 10 வருடங்களுக்கு பின் சென்ற வருடம் பேருந்து நிலையத்தில் ஒரு பெண் என்னை பார்ப்பதை கவனித்தேன் அவள் என் தோழி தான் , என்னுடன் விளையாடி என்னை சுற்றி வந்தவள் , என்னுடன் ஒரு வார்த்தை கூட பேச வில்லை , அவள் போக வேண்டிய பேருந்து வந்தது , பேருந்தில் ஏறி ஒரு பார்வை பார்த்தல் அந்த பார்வையின் அர்த்தம் நன்றாக இருக்கிறாயா என்று புரிந்து கொண்டேன் , ஒரு புன்னகை செய்து தனது குழந்தையின் முகத்தை என்னை பார்க்கும் படி திருப்பினாள் , இது எனது குழந்தை தோழனே எனது வாழ்கை சந்தோசமா போய்கிறது என்பதற்கு அடையாளமாய் புன்னகையை விட்டு சென்றால் , அவள் சிந்திய புன்னகையை எடுத்துக்கொண்டு திரும்பினேன்....
சனி, மார்ச் 13, 2010
வாழ்கை...!
ஏரை தாங்கும் நிலம்
உளியை தாங்கும் சிலை
உன்னைதாங்கும் பூமியை போல்
தாங்கிகொள் வலியை
வெற்றியின் வழி
அதிலிருந்து தொடங்கலாம்
வேகமாக மட்டும் அல்ல
கடைசி வரை வோடுபவனே வெல்வான்
கோப்பையை மட்டும் அல்ல வாழ்க்கையையும்
உலகெங்கும் நிரம்பிய காதல்
காதலால் காதலுக்க காதலால்
உருவாக்கப்பட்ட உலகில்
ஒருகாதல் போனால் என்ன..?
உன் காதலின் உண்மை உலகறியும்
புயல் அடித்தாலும் சாயாத நீ
தென்றல் அடித்து சாயலாமா
காதலை தீயாக்கி அதிலே
கிடந்து வேகலாமா
ஆயிரம் சூரியனின் ஒளி கொண்ட
உன் முகம் வடிப்போனால்
எங்கு செல்ல
பூமிக்கு ஒளிகுடுக்க
இன்று என்னுடைய ஓன்று
நாளை எவனுடையதோ என்ற வாழ்வில்
கவலை பட ஒன்றுனில்லை தோழா
என்று பிறந்தேன்
என்று மடிவேன் என்று அறியாத வாழ்வில்
கண்ணீர் விட ஒன்றுமில்லை தோழி ..,
பூக்களுக்கும் தென்றலுக்கும் நடுவே
பூவின் வாசனை உணர
தென்றலை அனுவிக்க
ஒரு வாழ்கை தந்த கடவுளுக்கு
நன்றி சொல் மனமே..!
ஆடி அடங்கும் வாழ்வில்
நீ மட்டும் அடங்கியே இருப்பது ஏன்..?
அதிக நாளாக பட்டம் வாங்காமல்
உன்னிடமிருக்கும் கவலைகளுக்கு
கொடுக்கலாம் பட்டம்
அனுப்பி வைக்கலாம் (farewell ) பெர்வல் கொண்டாடி
தோல்விகள் நிரந்தரம் இல்லை
வெற்றி புதிரனவையும் இல்லை
கண்ணீர் உனக்கனதும் இல்லை குழந்தையின் சிரிப்பு
மனைவின் முத்தம்
நண்பனின் அணைப்பு
தாயின் பாசம்
தந்தையின் அறிவுரை
எல்லாமே தேவையறதுதான்
வாழ்வும் சுமையனதுதான்
நீ உன்னை உணராதவரை …
-ஆழ் கடலின் அமைதியும் , பூக்களின் மௌனமும் , கொண்ட உன்னில் தொடங்கட்டும் புயல் சுனாமியாய் அடித்து செல்ல வெற்றியை...
இனி புன்னகைதேசம் புயல் தேசமாய்.......
சனி, பிப்ரவரி 13, 2010
அம்மா..!
கவிதையின் தலைப்பு நீ... அம்மா..!
ஒரே முறை பிறந்து
இறக்கும் வாழ்வில்
உன் உயிர் குடுத்து
எனக்கு உயிர் அளித்தாய் .. அம்மா..!
சுயநல உலகில் உன் இரத்தத்தையே
பாலாய் தந்தாய் அம்மா ..!
உன்னை காணாத ஒவ்வொரு நொடியும்
கண்கலங்கி போயிருப்பேன்
மற்றோரை கதிகலங்க வைத்திருப்பேன்
உன்னை பார்த்த நொடி புன்னகை பூத்திருப்பேன்
பொம்மையை கட்டியணைத்து உறங்கிய போதும்
உன் விரல் என்னிலிருந்து விலகிய போது
என் தூக்கமும் சேர்ந்தே விலகியது
இது உன் அப்பா , தாத்தா , பாட்டி , அண்ணன்
என்று எல்லோரையும் அறிமுகம் செய்த போதும்
அம்மா என்று அறிமுகம் செய்யாமலேயே
நான் அறிந்த ஆண்டவள் நீ
அன்பால் என்னை என்றும் ஆள்பவளும் நீ..!
வானில் இருந்து என்னை பார்க்க வந்த
தேவதை நீ.. அம்மா ..!
கடவுள் அனுப்பி என்னை காக்க வந்த
கடவுள் நீ அம்மா..!
என் வலிகளுக்கெல்லாம் நீ கண்கலங்கினாய்
காய்சல் என்று நான் உறங்கிய போதும்
நீ உறங்கியதே இல்லை ..,
பல முறை முதல் மதிப்பெண்ணை
என் பள்ளி மாணவனுக்கு விட்டு தந்த போதும்
என்னை மட்டும் நீ யாரிடமும் விட்டு தருவதில்லை
(அப்புடின இதுவரைக்கும் முதல் ரேங்க் வந்ததே இல்லைன்னு அர்த்தம்
என்னை கொடுமை சார் இது )
கோடி கொடுத்தாலும் கிடைக்காத உன் அன்பை
கொட்டி கொடுத்த மணற்கேணி நீ.. அம்மா..!
இன்னொரு ஜென்மம் வேண்டும்
மீண்டும் உன் மகனாக பிறக்க
உலகை படைத்த கடவுளை விட
என்னை படைத்த தாயே நீயே
உயர்ந்தவள் , என்றும்
என்னுள் நிறைந்தவள் ..!
(இந்த கவிதை என் அம்மாவுக்காக..!)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)